வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Thursday 4 February 2021

என் தமிழ் ஆசான் இலக்கிய கலாநிதி.வ.அ.இராசரெத்தினம்

1.தமிழால் கட்டுண்டேன்
பாலசுகுமார்
2020 ஆம் ஆண்டு நான் எழுதிய  முக நூல் பதிவும் அதற்கான பின்னூட்டங்களும்
95ஆவது அகவையில் எங்கள் இலக்கிய கலாநிதி வ.அ.இராசரெத்தினம்.


என் தமிழ் ஆசான்
சேனையூர் மத்திய கல்லூரியில் பிரதி அதிபராக க.பொ.த உயர் தரத்தில் தமிழ் ஆசானாக கடமையாற்றிய காலங்களும் , எங்கள் சேனையூரின் நீங்கா நினைவுகளில் அவர் மனைவி லில்லி அக்காவும் அவர்கள் குடும்பமும்.
என்பை வாசிக்க தூண்டிய எழுதத் தூண்டிய எழுத்துச் சித்தன் அவன்
ஈழத்து இலக்கிய உலகின் தனித்துவ தடம் பதித்த எங்கள் வ.அ
நவீன ஈழத்து தமிழ் இலக்கியம் தன் மண் சார்ந்த மரபின் முகமாய் வெளிக் கிளம்பியது எங்கள் எழுத்துச் சித்தன் வ.அ.வில் இருந்து என்றே சொல்லலாம்.சாதாரண மக்களின் வாழ்வு இலக்கியமாகியது நம் சக மனிதர்கள் நாவல்களிலும் சிறுகதைகளிலும் அவரால் உலா வந்தார்கள்.
கொட்டியாரத்தின் அழகையும் அதனோடு சேர்ந்த சமூக முரண்பாடுகளையும் தனக்கே உரிய எள்ளல் நடையுடன் எடுத்தியம்பிய எங்கள் எழுத்தன்.
தான் வாழ்ந்த சூழலை எழுத்தில் படம் பிடித்த மண் மணம் மாறா எழுத்தை எமக்களித்த மண்டியிடாத யாருக்கும் தலை வணங்காத எழுத்தாளனுக்கே உரிய கர்வத்தோடு கடைசி வரை தன் வாழ்வை கொண்டாடிய மகா ஆளுமை அவர்.
முற்போக்கு என்று பேசாமலேயே முற்போக்கு மிக்க கருத்துக்களை தன் எழுத்துக்களில் உலவ விட்ட உன்னதமான கதை சொல்லி.
தோணியும்,துறைக்காரனும்,சந்தானாள் புரவியும்,ஒரு வெண்மணற் கிராமம் காத்துக்கொண்டிருக்கிறதுவும் கிரவுஞ்சப் பறவைகளும்,கொழு கொம்பும் இன்னும் நூற்றுக் கணக்கான சிறுகதைகளும் வானொலி நாடகங்களும் மேடை நாடகங்களும் என அவர் எழுத்து நம் முன் கொட்டிக் கிடக்கிறது.
அவர் எழுத்தில் மூதூரும் கொட்டியாரத்தின்  பல கிராமங்களும் தம்பலகாமமும் ஆலங்கேணியும் என வாழ்வின் வாசத்தை அதன் முரண்களை சொல்லும் திறனில் இலக்கியங்களாய் நாவலாயும் சிறுகதையாயும் வெளிப்படுத்திய எவர் விமர்சனத்தையும் பொருட்படுத்தாத தன் எழுத்தில் நம்பிக்கை கொண்டு பயணித்த புதுமை விரும்பி அவர்.
தன் இலக்கிய நினைவுகள் எனும் நூலில் எனக்காகவே ஒரு பக்கத்தை ஒதுக்கி எழுதி இருப்பார் தன் இலக்கிய வாரிசாக என்னை அதில் பிரகடனப் படுத்தியிருப்பார்.
அவர் பிரகடனத்தை  நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேனா?தொடர்கிறேனா என்னுள் எப்போதும் இந்தக் கேள்வி  .........
கடந்த ஆண்டு என் முதல் நாவல் "கொடி எழு அன்னப் புரவி" முதல் சிறுகதைத் தொகுதி "கறுப்பி" ஆகியன வெளி வந்தது.பல சிறுகதைகளை எழுதி முடித்துள்ளேன் தம்பலகாமத்தை மையமாக வைத்து "செவ்வந்தி" எனும் நாவலும் எழுதி முடித்து கைகளில் உள்ளது பல சிறு கதைகளும் அவ்வப்போது எழுதுகிறேன் .இரண்டு கவிதைத் தொக்குப்புக்கள் பல நூறு கட்டுரைகள் இன்னும் பல நூல்கள் என என் எழுத்து தொடர்கிறது.
 நான் எழுதும் சிறுகதைகளும் ,நாவல்களும் என் ஆசான் வ.அ.காட்டிய இலக்கிய நயத்தின் வழியே பயணிக்கிறது.அவர் தாழ் பணிகிறேன் அவர் பிறந்த நாளில்


Yogananthan Kanakasooriyam
மூதூரில் பிறந்து நாவல்,சிறுகதை மூலம் மண்ணிற்கு புதிய அடையாளத்தைத் பெற்றுத்தந்த மாமனிதன் அவரிடம் சில நாட்கள் தமிழ் கற்கக் கிடைத்தது.பெரும் பேறே ஆத்மா இறையாட்சி பெறட்டும்


Shanmugam Arulanantham
,'ஒரு வெண்மணற் கிராமம் காத்துக்கொண்டிருக்கிறது'- வ.அ.காட்டிய இலக்கிய நயத்தின் வழியே பயணிக்கிறது.அவர் தாழ் பணிகிறேன்- Thank you Sugumar.

Nageswaran Kumarasami
நினைவில் நிறுத்தியவனாய்.........

Velupillai Thillinathan
மாமனிதர். அவர் மறைவை ஒட்டி the Daily News பத்திரிகையில் எனது இரங்கல் குறிப்பு வெளியானமை ஞாபகத்தில் நிற்கிறது.

Narayanapillai Swaminathan
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்

Jegatheesan Shandrasegaram
எனது ஆரம்பபாடசாலை கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயத்தில் எனது அம்மாவுடன் கற்பித்த ஆசிரியர்களில் ஒருவர் (அதிபராகவும் இருந்து இருக்க வேண்டும் ஞாபகம் இல்லை)

Vasanthy Antony
என் தந்தைக்கு கலாநிதி பட்டத்தை பெற்றுக் கொடுக்கவேண்டும் என்பதில் முழுமூச்சாக நின்று உழைத்ததை நான் மறக்கவில்லை சுகுமார்.[இறந்த பின்னர்].அவரது பவளவழா மலரில் தங்கள் ஆக்கம் இடம் பெறாதது அவருக்கு வேதனை . அதை உங்களிடம் சொன்னபோது நீங்கள் சொன்ன அதே பதிலை வேறொரு விடயத்திற்கு அப்பா சொன்னார்.அந்தளவிற்கு நீங்கள் அவரது ஆதமார்ந்த மாணவன்.
நன்றி சுகுமார்.
பதில்"வேறொரு புத்தகத்தை எழுதினாற் போச்சு"

Marian Antony Rajaratnam
அவரது எண்ணம் எழுத்தானது செயட்பாடு வாழ்வானது.

     ·

Sabes Sugunasabesan
அவர் எழுத்தில் இருந்த மண் வாசனை இன்னும் நினைவில் இருக்கிறது.
அவருடைய வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன்.

Gratian Fernando
He is my father’s best friend.

Koneswaran Manickawasagar
பதிவுக்கு மிக்க நன்றி. வாழ்க தம் தமிழ்த்தொண்டு.

     ·

Paiwa Asa
படைப்பாற்றலின் செழுமையில் பிறந்த
தவத்தில் உயர்ந்த படைப்
பாளியின் ஆன்மாவில்
இருந்து ஆன்மாவைப்
பிளந்துகொண்டு வெளிச்சமாக,விடுதலை
யாகப் பிறந்தவை அவரது இலக்கியங்கள்.
கொட்டியாபுர வாழ்விய
லின் பல்வேறு கோலங்க
ளை உயர்கதியில் தாங்கிய எழுத்துக்குச்
சொந்தக்காரன்.
நான் எழுதிக்கொண்டி
ருந்தது அவருக்குத்
தெரியவே தெரியாது.
மூதூரில் வேறு சிலரைத்
தான் கவிஞர்களாகவும்,
எழுதுவார்களென்றும்
கணக்கு வைத்திருந்தார்.
அவரைப் பொறுத்தமட்
டில் நானொரு விளையா
ட்டுப் பேர்வழி மட்டுமே.
என்றும் அவர் என்னோடு
ம், என் எழுத்தோடுமிருப்
பார்.

Leanard Lorenzo
வ.அ. ஈழத்து ஆக்க இலக்கிய புதுமைகளின் முகவரி.
அவர் எழுத்தில் லயித்த போதெல்லாம் நான் நினைப்பது ஒன்று தான் "அவர் இன்னமும் எழுதியிருக்கலாம்!!"

Selvanayagam Srikrishnarajah
.நான் எனது ஆசிரியபதவியை வகிக்கும்போது எனது தமிழ் ஆசான் வ.அ.அவர்களின் மாதிரியைப்பின்பற்றியே தமிழ் மொழி கற்பித்தேன்.எனக்குப்பிடித்தமான விருப்பமான ஆசான் வ.அ.மூதூர் மண்ணின் கிராமங்களின் வாசனையை தனது எழுத்துமூலம் உலாவ விட்ட பெருமகன் அந்நாரின் பிறந்த நாளுக்கு என்வாழ்த்துக்கள்
.ஆசானை நினைவுபடுத்தியபேராசிரியருக்கு நன்றிகள்.


Yogaraja Yoga
மூதூர் மண்ணின் பெருமைமிகு அடையாளம் வ.அ ஐயா.
Marian Antony Rajaratnam
என் தந்தையின் பிறந்ததின நினைவு நாளில் தங்கள் வாழ்த்துக்களையும் அன்பையும்,ஆதரவையும் தெரிவித்த அணைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.

Pragash Selva
மூதூர் மண்ணின் பெருமைமிகு அடையாளம் வ.அ ஐயா.

Tharshega Sundaralingam
எங்கள் மூதூர் மண்ணின் பெ௫ மை மிகு அடை யாளம் ஐயா அவர்கள்
 
Sathyadas Thavarasa
தமிழ் மணி வ.அ.இராசரத்தினம்

Jeya Sunda
ஈழத்து சிறுகதை
நாயகன்.
வேதநாயகம் தபேந்திரன்
நல்லதொரு நினைவுப் பதிவு. பெரியாரை ஒருமுறை மூதூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாட முடிந்தது. அப்போது அவரது குடும்பத்தினர் செய்த வரவேற்பு மறக்க முடியாதது.


Ganesh Subramaniam
தமிழ் ஆற்றலும் அறிவும் கொண்ட ஆசான். மூதூர் பகுதியில் பல புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்.
அவரின் பெருமையை எழுதியதில் மகிழ்ச்சி!
Abdul Malique
நன்றி மறப்பது நன்றன்று.
Ratnakumar Sasikala
I know very well he is my asaiappa's friend (S.Po)

Sithaparanathan Ramesh
அவருடைய தம்பியாரின் பாரதிலேன் வீட்டில் அவரைச் சந்தித்து உரையாடிய தருணங்கள் இன்றும் என் நினைவில் பசுமையுடன் உள்ளன. அவருடைய பொச்சங்கள் புத்தக தினவிழா மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் இடம் பெற்றபோது அப்புத்தகத்தை அவர் எனக்கு தந்து உதவினார். தலைசிறந்த புனைகதையாசிரியர். மொழி பெயர்ப்பளர் என்பதற்கப்பால் மிக நல்ல இருதயம் படைத்தவர்.

Julian Croos
Great artist and his son will continue

Premila Sugumar
வ.அ என் பெரியப்பா என்பதில் எப்போதுமே கர்வமுண்டு,மட்டக்களப்பு வரும்போதெல்லாம் உரிமையோடு எங்கள் வீட்டில் தங்கி ,இரவெல்லாம் சுகுமாரோடு பேசிக் கழிப்பார்.

2.என் தமிழ்  ஆசான்
பாலசுகுமார்
2017 ஆம் ஆண்டு எனது முக நூல் பதிவும் அதற்கான பின்னூட்டங்களும்
இலக்கிய கலாநிதி வ.அ.இராசரெத்தினம்  அவர்களின் 92 வது பிறந்த நாள் இன்று 05.06.2017
என் தமிழ் ஆசான் தமிழ் மீதான காதலை ஏற்படுத்தி வாசிப்பு அனுபவத்தையும் பழந்தமிழ் இலக்கியம் உலக இலக்கியம் எல்லாவற்றையும் நான் அறிய திறவுகோலாய் இப்போதும் எனக்குள் என் நினைவுகளில் சிம்மாசனமிட்டிருக்கும் இலக்கிய ஆளுமை.
என் கையயைப் பிடித்து இந்த வழி போ என தடமிட்டு தந்த ஆசான் .
மண் மணம் செறிந்த எழுத்துக்களைத் தந்து ஈழத்து இலக்கியத்துக்கு செழுமை சேர்த்த படைப்பாளி.
சிறுகதை
நாவல்
நாடகம்
உரைச்சித்திரம்
கவிதை
உரை
என எல்லாம் கைவரப் பெற்ற புலமையாளன் .திருகோணமலை மாவட்டத்தில் இலக்கிய கலாநிதி பட்டம் பெற்ற ஒரே ஒரு படைப்பாளியாய் கொட்டியாரத்துக்கு பெருமை சேர்த்த இலக்கிய நாயகன்.
இவர் எழுத்துக்கள் பெரும்பாலானவற்றில் கொட்டியாரத்தின் அழகை தித்திக்க தித்திக்க தேன் சுவை சொட்ட எடுத்துச் சொல்லியிருப்பார்.மாவலியாள் இவர் எழுத்துக்களில் கரை புரண்டோடுவாள் கங்கையின் அலயடிப்பும் கொட்டியாரக் குடாக் கடலின் ஆர்ப்பரிப்பும் இவர் எழுத்தாணியில் நடமிடும்.
இவரது  தோணி சிறுகதை   உலக மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டது.
''சந்தானாள் புரவியில்'' மூதூரின் பழைமையயயயும் கொட்டியாரக் குடாக் கடலின் அழகையும் பல சிறு கதைகளில் மூதூரின் கிராமங்கள் பலவற்றின் சிறப்புக்களையும் படம் பிடித்திருப்பார்.
''ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கிடக்கிறது'' எனும் நாவலில் ஆலங்கேணி எனும் அழகு தமிழ் கிராமத்தை அதன் பண்பாட்டை நம்முன் கொண்டு வந்து நிறுத்தியவர்.
''கிரவுஞ்சப் பறவைகள்'' எனும் வரலாற்றுப் புதினத்தின் மூலம் வரலாற்று நாவல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நமக்கு பாடமாக விட்டுச் சென்றுள்ளார்
சேனையூர் மத்திய கல்லூரியில் சிறப்புறு தமிழ் ஆசானாய் பிரதிஅதிபராய் கடமையாற்றி  எம் கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர்.
Sunda Sinnadurai
வ.அ அவர்கள் என்று எம்மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கிய சிகரம்.
Velupillai Thillinathan
A talented writer and a good friend of mine. He is no more but I still reaped him as the doyen of Tamil literature
Param Nandha
அழகான குரு பதிவு.
Cheramaan Chenkuttan
இலக்கிய சாகித்திய மண்டலம் பரிசுக்கு சொந்தக்காரரும் இவரே...
Ramalingam Ratnasingam
எமது பிரதேசத்தின் மண்வாசனை டஇலக்கிய மேதை,மதிப்புக்குரிய எங்கள் ஆசானை என்றும் மறவோம்

Vasanthy Antony
வ.அ வின் கற்பித்தல்
தளம் சேனையூர் மத்திய
கல்லூரிதான்.மற்றும்
ஆலங்கேணி,பெருவெளி.
பள்ளிக்குடியிருப்பு
எல்லாம் அவரதுகற்பனைத்
தளங்கள் எனபதுதான்
எனது கருத்து.புனித
அந்தோனியார் ம.வி
கூட அம்மா இறந்ததால்
தான் வந்தார்.
Noble Thurai Anthony
நன்றி சுகுமார் சேர்.
Rakuthas Shanmukanathan
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா
Jeevarupan Jeeva
வ.அ. அவர்களின் புகழ் என்றும் நிலைக்கும்
Sivapalasingam Kajanthan
I still remember this thinak kathaikal
Kumarathas Sivapragasam
தமிழ் இலக்கிய ஆசானும்,எழுத்தின் சிகரமும்
வ.அ.இராசரெத்தினம் அவர்கட்க்கு என் இனிய பிறந்தநாள் நல்வாத்துக்கள்.
மூதூரின் எழில்மிகு இயற்கை சார்ந்த படைப்பாளர்களின்.
எழுத்தாற்றலை முதன்மைப்படுத்தி எமது தலைமுறைகளிற்கு... முகப்டுத்திக்கொண்டிருக்கும்.
உங்களுக்கு என் மனமு
வர்ந்த வாழ்த்தூக்கள்....
Muralitharan Nadarajah
"கிரௌஞ்சப் பறவைகள்" என்று வரும்! அந்தக் காலத்தில் இந்த நாவலை வாசித்திருக்கிறேன்!
Noel Ariyaratnam
நன்றி சுகுமார் அண்ணன் , அவருக்கு நான் மகனாகப்பிறந்தத்தை நினைத்து பெருமை அடைகின்றேன் , எங்களை வளர்த்த தெய்வம்
Mano Shanan
Enakku Mikavum pidiththa eluththalar. ivatathu pala kathaikalai naan vaasiththullen. Athilum thooni , thaai enpana sirappana kathailal
·
Kalai Arasu
இலக்கிய உலகின் கொழுகொம்பாய் நின்றவர்
Shan Thavarajah
 நானும் அவரின் எழுத்தின் ரசிகனே.
Saravana Pavan
இவருடன் கதைத்து உறவாடும் பாக்கியம் எனக்கும் கிடைத்ததை எண்ணி மனம் பூரிப்படைகிறது

3தமிழாய் எழுத்தாய்
பாலசுகுமார்
2017 ஆம் ஆண்டு சேனையூர் மத்திய கல்லூரி பற்றிய என்  முகநூல் தொடர் பதிவில் வ.அ.பற்றிய குறிப்புகளும் அதற்கான பின்னூட்டங்களும்
சேனையூர் மத்திய கல்லூரி .60 பதிவு.34
தமிழாய் எழுத்தாய்
இலக்கிய கலாநிதி வ.அ.இராசரெத்தினம்
திருகோணமலை மாவட்டத்தில் இலக்கிய கலாநிதி பட்டம் பெற்ற ஒரே ஒரு ஆளுமை.உலகத் தமிழ் எழுத்தாளர் வரிசையில் சிறந்த எழுத்தாளர் என மகுடம் சூட்டப் பட்டவர்.
சேனையூர் மத்திய கல்லூரியின் ஆசிரியராய் பிரதி அதிபராய் கடமையாற்றி பல இலக்கிய ஆளுமைகளின் உருவாக்கத்துக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.
க.பொ.த உயர் தரத்தில் என் தமிழ் ஆசான்.நவீன இலக்கியங்களையும் பழந்தமிழ் இலக்கியங்களையும் நான் அறிய என்னை இயக்கியவர் மூதூரில் அவர் நூலகம் என் வாசிப்பின் அகலிப்பை சாத்தியப் படுத்தியது மாப்பாசானும்,செக்கோவும்  என்னுள் வாசம் செய்யத் தொடங்கியது என் ஆசானின் அறிமுகத்தால் பேராசிரியர் கைலாசபதியயை எனக்கு அறிமுகப் படுத்தியவரும் இவரே.
தமிழ் இலக்கியமாய் வாழ்ந்த  எங்கள் தமிழ் ஆசான் எந்த இலக்கியத்தையும் விமர்சனக் கண் கொண்டு நோக்க வேண்டும் என்ற கோட்பாட்டை எனக்குள் விதைத்தவர்.
சங்க இலக்கியம்  இடைக்கால இலக்கியம் ,நவீன இலக்கியம், உலக இலக்கியம் என எல்லா இலக்கியங்களுக்கும்  பரீட்சயமாக்கும் சாத்தியத்தினை உருவாக்கித் தந்தவர்.
பல்கலைக் கழகத்தில் நான் தமிழை சிறப்பு பாடமாக கற்பதற்கான விருப்பத்தை உருவாக்கியது என் தமிழ் ஆசானின் தூண்டுதலே.இன்று வரை தமிழின் மீதான காதலும் அதன் தொடர்ச்சியும் என் இலக்கிய ஆசான் திருமிகு  வ.அ  அவர்களிடமிருந்து கிடைத்தத வரப் பிரசாதம்
இலக்கிய படைப்புகள்
துறைக்காரன் (நாவல்)
கொழுகொம்பு (நாவல்)
கிரௌஞ்சப் பறவைகள் (நாவல்)
ஒரு காவியம்முற்றுப் பெறுகிறது (நாவல்)
ஒரு காவியம் நிறைவு பெறுகிறது (சிறுகதைத் தொகுதி)
ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கின்றது (நாவல்)
தோணி (சிறுகதைத் தொகுதி)
பூவரசம் பூ (மொழிபெயர்ப்புக் கவிதை)
மூதூர் புனித அந்தோனியார் கோயிலின் பூர்வீக வரலாறு (சரித்திரம்)
இலக்கிய நினைவுகள் (நினைவுக் கட்டுரைகள்), 1995
திருக்கரசைப் புராணம் (புது உரை)
நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள்
வானொலி நாடகங்கள்
கட்டுரைகள்
கலாபூசணம் ,தமிழ் ஒளி பல்வேறு இலக்கிய விருதுகள் எல்லாவற்றுக்கும் மேலாக கிழக்குப் பல்கலைக் கழகம் வளங்கிய இலக்கிய கலாநிதி பட்டம்
அவரது தமிழ்ப் பணிக்கும் இலக்கிய ஆளுமைக்கும் கிடைத்த கெளரவம்
Skn Pillai
திருமிகு வ அ இ. வின் இரண்டு புத்தகங்களை பதிப்பித்தவன் என்பதை பணிவுடன் பதிவு செய்கின்றேன். நன்றி.
Vasanthy Antony
நன்றி சுகுமார்
நானும்அப்பாவின் தமிழ்
A/lமாணவி ஆனாலும்
அறிந்தது முதல்அவர்
மூலம் வந்த தமிழ்தான்
சிறுகதைத்தொகுதிகள்
*தோணி
கொட்டியாக்கதைகள்
ஒரு காவியம் நிறைவு
பெறுகின்றது.
திணைக்கதைகள்
.
கட்டுரை
பொச்சங்கள்
இலக்கிய நினைவுகள்
நாவல்
மண்ணிற் சமைந்த மனிதர்கள்[விடுபட்டது]
. குறுநாவல்
ஒரு காவியம் நிறைவு
பெறுகின்றது.
. . . பட்டம் . .
தமிழ் ஒளி.
அப்பாவிற்கு கலாநிதி
பட்டம் கிடைக்க
வேண்டும் என்பதில்
முழு மூச்சாக உழைத்தவர் நீங்கள்
Vinayakamoorthy Navaratnarajah
ஆமாம்...எங்கள் தமிழை வளப்படுத்தியவர் வ.அ. ஓர் இலக்கிய மேதையின் மாணவன் என்பதிலும், அவரின் மகள் வசந்தி வகுப்த் தோழி என்பதிலும் (தாங்களும்) நான் பெருமையடைகிறேன். இவரின் நாடகங்களிலும் நடித்திருக்கிறோம்.
Nagul Selvan
அய்யா இவரின் புத்தகங்கள் திருமலை நூலகத்தில் சில உள்ளன். தேசிய சுவடிக் கூடம், noolaham.org போன்றவற்றில் ஒன்றுதானும் இல்லை. இவரது நூல்களை மறுபதிப்பு செய்து, மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி சிலையொன்றும் நிறுவ வேண்டும். நான் என்னாலான நிதியுதவி செய்வேன்.
அவரது மகனாகிய நானும் நிதி திரட்டி தருகிறேன்

Ramalingam Ratnasingam
எழுத்துத்துறையில் ஆர்வம் ஏற்படுத்திய ஆசான் மூதூர் மண்ணுக்கு புகழ் தேடித்தந்த உலகளாவிய மண்வாசனை எழுத்தாளர் மங்காது அவர் புகழ்

Shanmugam Arulanantham
We cannot forget Vana Aana . He has brought my village peoples culture into light in his famouse noval 'Oru Venmanal Kiramamam Kaththirukkirathu' I have written few novels to fulfill thirst and won sahithya awards
Varnakulanathan Tharmabavan
ஐயாவின் படைப்புக்கள் பற்றி நிறைய கேள்வியற்றாலும் .ஒரு வெண்மணல் கிராமம் காத்துக்கிடக்கிறது. பத்திரிகையில் தொடராக வெளிவந்த போது வாசித்தேன்.
Arumugam Selvanayagam
இலங்கை நாட்டிற்கு இலக்கிய பணி ஆற்றிய அறிஞர் பள்ளிக்கு டி யிருப்பில் கற்பித்தார் ஊரைப்பற்றி சிறுகதை எழுதியவர் பாடசாலை கீதம் அவரால் எழுத ப்பட்டது மறக்கமுடியாத மாமனிதர் நினைவுகள் பதிவுக்கு வாழ்த்துகள்
Vasanthy Antony
என் தந்தை வ.அ தான்
பள்ளிக்கடியிருப்பு
பாடசாலைக்கீதத்தை
எழுதினார் என்பதை
வெளிப்படுத்தியமைக்கு
நன்றி.அந்தோனியார்
பாடசாலைகீதத்தையும்
அம்மாவின் காலத்தில்
தான் எழுதியதாகத்தான்
என்னிடம் கூறினார்
என்உறவினர் சிலர்
மறுத்தனர்.அதனால் நான் வெளிப்படுத்த
விரும்பவில்லை. அவரும்
இல்லை ஆனாலும்
வ.அஎழுத்தில் பொய்
உரைக்க அவசியமில்லை
எனபது என்க்கும் தெரியும் அவரின்
எழுத்தின் கனம்
புரிந்தோர்க்கும் விளங்கும்.முற்றத்து
மல்லிகை மணப்பதில்லை இது
என் ஆதங்கம்.நன்றி
Arumugam Selvanayagam
பள்ளிக்கு டி யிருப்பில் கலைமகள் இந்துக் கல்லூரியில் இப்போதும் அவரால் எழுத ப்பட்ட பாடசாலை க்கீதமே பாடப்படுகிறது,அவரால் அப்போது எழுத ப்பட்ட சிறுகதை கோயில் கும்பாபிஷேக மலரில் இடம்பெற்று ள்ளது.வரலாற்று ஆணவமாக உள்ளது
Vasanthy Antony
மிக நன்றி.
Michael Collin
1991இல் தாகம் கலை இலக்கிய வட்டம் நடாத்திய இலக்கிய பெரு விழாவில் திருமலையின் மூத்த படைப்பாளிகள் திரு.வ..அ.இராசரத்தினம் கவிஞர் தாமரைத்தீவான் திரு.க. அருள் சுப்பிரமணியம் திருமலை நவம் ஆகியோர் வாழும்போதே பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
Sujitharan Vijayarednam
அருமையான பதிவு..
Satheeskumar Arumainathan
என்னுடைய "கொட்டியாபுரப்பற்று முதுசங்கள்" என்ற நூலில் வ. அ வை ஒரு அத்தியாயமாக்கியுள்ளேன்.
Kalirajah Mathivathanam
பாராட்டுக்கள் கொலின்.
வாழும்போது கலைஞர்கள்
கௌரவிக்கப்படவேண்டிய
அவசியம் பற்றி பலர் பல காரணங்களால் கவனத்தில் கொள்வதில்லை. அவர்களது மரணத்தின் பின்
அவர்களைப் பெருமைப்படுத்துவதன்
மூலம் தங்களுக்கு புகழ் தேடிக் கொள்கிறார்கள்.
நீங்கள் பாராட்டி மகிழ்ந்த
நால்வருமே நம் ஊருக்கும்
தமிழுக்கும் பெருமை தேடித்
தந்த நல் முத்துக்கள்
Ramalingam Ratnasingam
மறக்கமுடியாத ஆசிரியர் எழுத்து த் துறையை எம்மாணவர்களுக்கு தூண்டியவர்,கதை கருக்கட்டத்தொடங்கினால் கதைப்பது குறையும் அடிக்கடி செருமல் வரும் அதன்பின் கதைவரும் பத்திரிகைகளில் .அவரிடம் கற்றதில் பெருமைப்படுகின்றோம்.நன்றி சுகுமார்.

Babu Vasanthakumar
எங்கள் ஆதவனின் (Toronto 12 09 2012)முன்பக்க அட்டையில் வ அ இ
 


நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி