நம்மவர்களை நாம் அறிவோம்
மூதூரின் மூத்த தமிழ் பண்டிதர்
பண்டிதர் வஸ்தியான் நிக்கிலஸ்
தமிழ் அறிந்தோன்
ஒரு காலத்தில் பண்டிதர்கள் பலர் வாழ்ந்து சிறப்பு பெற்ற இடமாக மூதூர்
இருந்திருக்கிறது என்பதை மூதூரின் கலை இலக்கிய வரலாறு பேசுகிறது.இவர்கள்
பற்றி இலக்கிய கலாநிதி.வ.அ .இராசரெத்தினம் அவர்கள் தன் இலக்கிய நினைவுகள்
நூலில் குறிப்பிட்டு செல்கிறார்.அவர்களில் பண்டிதர் நிக்கிலசும்
ஒருவர்.தமிழ் மீதும் பாரதி மீதும் காதல் கொண்ட ஒரு தமிழ் ஆசானாய் அறியப்
படுகிறார்.ஆசிரியராக அதிபராக கல்விப் பணியில் மூதுருக்கு பெருமை
சேர்த்தவர்களில் ஒருவர்.
ஈழத்து தமிழ் இலக்கிய உலகுக்கு அளித்த
பெரும் கொடையாய் அமைவது இவர் எழுதிய "நான் கண்ட பாரதி" எனும் நூல்.மூதூர்
மண் பெருமை கொள்ளும் வகையில் இந்த நூலை அவர் ஆக்கியுள்ளார் இதனை ஒரு ஆய்வு
நூலாகவே அறிமுகப் படுத்துகிறார்.அதில் பல்வேறு தலைப்புகளில் பாரதியை
தன்னுள் வாங்கி நுண்ணிதான விபரிப்புகளுடன் இந்த நூல் அவரது பண்டித தமிழ்
ஆளுமையை வெளிப்படுத்தி நிற்கிறது.பாரதி பற்றி தீவீர வாசிப்பும் தேடலும்
ஆய்வுகளும் ஈழத்தில் எண்பதுகளில் பாரதி நூற்றாண்டை ஒட்டியே முனைப்பு
பெறுகின்றன.ஆனால் 1965ம் ஆண்டிலேயே "நான் கண்ட பாரதி" எனும் நூலை
வெளியிட்டு ஈழத் தமிழ் இலக்கிய உலகுக்க்கும் மூதூர் மண்ணுக்கும் பெருமை
சேர்க்கிறார்.
நான் கண்ட பாரதி நூலில் இவர் எழுதிய சமர்ப்பணம் அவர் தமிழ் ஆளுமைமையை சொல்லி நிற்கிறது
"சமர்ப்பணம்
சீர்பரவு பாரதியின் சிறப்புறுநற் போதகத்தை
பேர்காத லோடெழுதி பெருமகிழ்வுற் றிந்நூலை
ஏர்மருவு தந்தையர்க்கா ஏதமிளாத் தாயருக்கா
பேர் பரவு மெந்தன் பெறற்கரிய சோதரற்கா
மைந்தருக்கா மகளிருக்கா யாருக்கர்ப் பணிப்பதென்று
சிந்தனையி லே யாழ்ந்து செயல்மறந் திருந்துவிட்டேன்.
கண்மூடி னேனே யான் கடுவுறக்கங் கொண்டேனே
மண்ணறிவு மோ வெந்தன் மாசில் தரிசனத்தை
விண்ணி லிருந்து இழிந்துவந்த பூங்கொடியாள்.
அன்ன நடைநடந்தாள் அருகில் வந் தமர்ந்துவிட்டாள்.
வன்ன இடையை வனிதை முகமதியை
கருங்குவளை வாள் விழியைக் கவுள்மாவின் நன்கனியை இன்னமுதலாய
இன் பத் திருவுருவை இன்னாளென் றேயறியா தேங்கிநின் றே யானும் பொன்னனையாள் தனை நோக்கிப் பொன்னே நீர்
யாரென்றேன்
முத்து நகை த வள முகமலரைச் சற்றுயர்த்தி தத்துவரிச் சேல்விழியைச் சற்றே
யுருட்டியுங்கள் நெஞ்சச் சுனையதனில் நின்றலர்ந்த தாமரையில் என்று
மிருக்கின்றேன் எனையேன் மறந்தீர்கள்.
என்றவுரை யென்றன் இருசெவியி
லேறுமுன்னே கண்டுமொழிக் காரிகையைக் கண்டுகொண்டேன் யானும் துள்ளி யெழுந்தேன்
அத் துடியிடையைத் தானெடுத்தேன் பதினோராண்டின் முன் பறந்துசென்ற
பைங்கிளியே, மதிவதன மானே யென் மாசில் மனோன்மணியே
என்னுடலி லென்னாவி யுள்ளளவும் நான் மறவேன்
என்வேண்டு மானுலும் ஏந்திழைகே ளென்றேற்கு பொன்வேண்டாம் புவனப் பொருளொன்று
மேவேண்டாம் என்று மிறவாத இன்புகழே வேண்டுமென்று இன்முகத்தையே காட்டி
இணைமலர்க்கை நீட்டிநின்றாள் நன்றே நீர் கேட்டீர் நவையிலா நாயகியே இன்றே
தருகின்றேன் இன்பப் பெயர் வாழ என்றளித் தேனவட் கிப்புதுப் பனுவலை.
உவப்புடன் அளித் திட்ட இன்பப் பனுவல் பூவில வட் கரிய சமர்ப் பணம்,"
நான் என் சிறு வயதிலிருந்தே அறிவேன் 1964ஆம் ஆண்டு சேனையூர் மத்திய
கல்லூரியில் நடை பெற்ற பாரதி விழாவில் அவர் பேச்சே எனக்கு முதல் அறிமுகம்
அந்த பேச்சு ஒரு புகை போல ஞாபத்தில் உள்ளது
"நான் கண்ட பாரதி " எனும் நூலை எழுதுவதற்கு சேனையுரில் நடந்த அந்த விழாவே காரணமாகியது என்பதை இப்படிக் கூறுகிறார்
.
"சென்ற புரட்டாதி மாதம் பன்னிரண்டாந் திகதி தி/சேனையூர் அரசினர் தமிழ்க்
கலவன் வித்தி யாலயத்தில் சேனையூர்க் கலாமன்றத்தினரின் ஆதர வில் நடந்த பாரதி
விழாவுக்கு நானும் ஒரு பேச்சாளனாக அழைக்கப் பட்டிருந்தேன். என்னுடன் பல
பண்டிதர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் கூட வந்திருந்தார்கள்
விழாவைச் சிறப்பிப்பதற்காக.
விழா ஆரம்பிக்கப்பட்டபொழுது என்
பேச்சுக்கு உரிய இடம் வரவே நான் கொடுத்த தலையங்கத்தின் கீழ் மிக நீண்டதோர்
சொற்பெருக்காற்றி னேன். எனினும், என்பேச்சுக்கு நேரம் போதவில்லை.
மறுபேச்சாளர்களுக்கும் இடங்கொடுக்க வேண்டும். கதம்ப நிகழ்ச்சிகளும்
இருக்கின்றன. அவைகளுக்கும், இடம் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால் என்
பேச்சைச் சுருக்கிக்கொண்டேன். விழாவும் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது.
மறுநாள் எனது இல்லத்திற்கு சில அன்பர்கள் வந்தார்கள். அவர்களுட் சிலர்
முதல்நாள் பாரதி விழாவில் நான் பேசியபேச்சை விதந்து பேசிக்
கொண்டிருந்தார்கள். அவ்வமயம் எனது அருகில் இருந்த மூதூரின் முதிர்தமிழ்
அறிஞரும், சிறந்த இரசிகரும், பாடசாலைத் தலைமை ஆசிரியருமான திருவாளர் அ.
சவரிமுத்து என்பவர் என்னைப் பார்த்து, நீர் பேசிய தலையங்கம் என்ன என்று
அமைதியுடன் கேட்டார். நான் அதற்கு நான் கண்ட பாரதி என்று பதிலளித்தேன்.
என்ன என்ன தலைப் புகளின் கீழ் உரையாற்றினீர் என்று மீண்டும் என்னைக்
கேட்டார்.
நானும் உடனே பதில் கூறினேன். என் பதிலைக்கேட்ட அவ் ரசிகர்
‘தம்பி! தமிழ்த் தாயின் அபிமான புத்திரன் பாரதி, அவன் கொள் கைகளை
நற்றமிழ்த்தேன் விட்டுரைத்து நம் தமிழ்த் தாயின் நன்னுதலில் தி லகமிட்டு
அவளைத் தன் மானத்துடன் தலை நிமிர்ந்து நடக்கச் செய்தல் உம் தலையாய கடன்.
நீர் பேசிய ஒவ்வொரு தலைப் புகளும் அதியுன்னத திரவியங்கள். ஆகையால், உடனே
அவைகளைத் தொகுத்தெழுதி ஒரு ஆராய்ச் சிக்கட்டுரையாக வெளிவிடும். அதனல் தமிழ்
உல கம் பலனடையும்' என்று கூறி என்னை ஊக்குவித்தார்.
அந்த இரசிகரின்
ஊக்குதலால் உந்தப்பட்ட நான் மார்கழி விடுதலையில் மிகக் குறுகிய காலத்தில்
இவ்வாராய்ச்சிக் கட்டுரைகள் அனைத்தையும் எழுதி, என்னை ஊக்குவித்த இரசிகரை
வரவழைத்து அவரி டம் காட்டினேன். இக்கட்டுரைகளை முற்ற முடிய வாசித்த அவ்விர
சிகர், அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயன்’ என்பதற் கமைய உமது
கட்டுரைகள் மிக நன்றாய் அமைந்து இருக்கின்றன"
1964ஆம் ஆண்டிலேயே
சேனையூர் தமிழ் கலா மன்றத்தின் பெரு விழா பாரதி விழா ஈழத்து கலை இலக்கியப்
பரப்பில் சேனையூருக்கு பெருமை சேர்த்து நிற்கிறது.
மூதூரின் மூத்த
தமிழ் அறிஞரான பண்டிதர் நிக்கிலஸ் கொண்டாடப் படவேண்டியவர்.அவர் எழுதிய
"நான் கண்ட பாரதி " நூல் மீள் பதிப்பு பெறவேண்டும்.
பால.சுகுமார்
மேனாள் புல முதன்மையர்
கிழக்குப் பல்கலைக்கழகம்