வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 14 December 2020

ஆனந்தன் எனும் அற்புதம்

  • ஆனந்தன் எனும் அற்புதம்
     
     
    தோழர் ஆனந்தன் மறைந்து இருபத்தியைந்து ஆண்டுகள்
    ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனித்துவ முத்திரை பதித்த தடம் மாறா இலக்கிய ஆளுமை மனித நேயம் என்பதற்கு தன் வாழ்வையே அர்ப்பணித்தவன் .
    மட்டக்களப்புக்கு நான் வந்த பின் எனக்கு அறிமுகமாகி ஒரு மூன்று வருடத்துக்குள் மூன்று யுகத்துக்கான நினைவுகளை என்னில் ஏற்படுத்திச் சென்ற தோழமை.
    எளிமை அன்பு நேர்மை இவற்றின் இலக்கணம் அவன்
    பொய்மையில்லா இலக்கியம் பேசுபவன் இலக்கியக் கூட்டங்களில் தயவு தாட்சண்யம் பார்க்காத விமர்சகன்.
    அவனது "கவிதை வாங்கல்லையோ கவிதை" என்ற அமர வரிகள் இன்று எவ்வளவு பொருந்தி நிற்கிறது அவன் நினைவாய்.
    மட்டக்களப்பு வாசகர் வட்டத்தின் அடையாளமாய் உலா வந்த உயர் தனி இலக்கிய ஆளுமை.
    முற்போக்கு முகம் கொண்டவன் போலிகளைக் கண்டு பொங்கும் குணம் உடையான்.
    மலையாள இலக்கியத்தில் ஈடுபாடும் அந்த மொழித் திறனும் வாய்க்கப் பெற்றவன்
    அவன் நினைவுகளோடு நான்
    2019 ஆண்டு அவன் நினைவாய் எழுதிய பதிவு
    மறந்து போகுமா
    கலை இலக்கிய ஆளுமை ஆனந்தன்
    ஆனந்தன் இறந்து 25 வருடங்களை எட்டி நிற்கிறது,ஆயினும் எல்லாம் நேற்றுப் போல் என் நினைவில் நீள்கிறது.அவன் எனக்கு அறிமுகமானது 1992 ல் நான் கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளராக வந்த பிறகுதான் ஒரு மூன்று வருடங்கள்தான் ஆனாலும் நிறைந்த நினைவுகளை என்னுள் விட்டுச் சென்றுள்ளான் .
    1992ல் என்னைக் கண்டதும் என்னிடம் முதல் சொன்ன விடயம் அபோது சாருமதி மட்டக்களப்பிலிருந்து வெளியிட்ட "வயல்" சஞ்சிகையில் நான் பேராசிரியர் வானமாமலை பற்றி எழுதிய கட்டுரையை சிலாகித்த விதமும் அதில் நான் இன்னும் என்ன சொல்லியிருக்கலாம் என்பது பற்றியுமான விமர்சனப் பார்வை என்னை அவனுள் நெருகமாக்கியது.நான் அறிந்த மிகச் சிறந்த வாசகன் மாக்சியத்தை நேசித்த உண்மைத் தோழன்.விருப்பு வெறுப்புகள் அற்ற விமர்சகன் .
    வாசகர் வட்டத்துக்காய் ஈழத்து நாட்டாரியல் பற்றி ஓருரை ஆற்றும் படி கேட்டு ஒரு நீண்ட உரையும் அதன் பின்னரான கலந்துரையாடலும் கிழக்கின் நாட்டார் மண் சார்ந்த மரபுகள் பற்றி அவனது அபிப்பிராயங்களும் அந்த இலக்கிய கலந்துரையாடலுக்கு மகுடம் சூட்டி நின்றன.
    நான் எங்கு உரையாற்றினாலும் என் ரசிகன் அவன் என் உரையை சிலாகித்து சிலாகித்து கதை சொல்வான்.ஆனந்தனைப் போல எனக்கு இன்னொரு ரசிகனும் இருந்தான் சிவராம் இருவரும் ஒரு சேர என் வீட்டு முன் மண்டபத்தில் இஞ்சி பிளேண்டியையும் குடித்துக் கொண்டு சுவாரஸ்யமான இலக்கிய அரசியல் உரையாடல்கள்.
    இஞ்சிப் பிளேண்டியென்றால் ஆனந்தனுக்கு உயிர் ஆனந்தன் வீட்டுக்கு எப்போ சென்றாலும் வத்சலா இஞ்சிப் பிளேண்டியோடு வந்து நிற்பா.மறந்து போகுமா இவையெல்லாம்.
    மகள் அனாமிகாவோடு செல்லம் பொழிவதில் அவன் என்றுமே குறை குறை வைக்கவில்லை பிள்ளைகள் என்றால் அவர்கள் மொழியில் சொக்கிப் போவான் .அனாமிகாவை சீண்டிப் பார்ப்பதில் அலாதிப் பிரியம் அவனுக்கு இன்று அவனும் இல்லை அவன் நேசித்த என் மகளும் இல்லை ஆனந்தன் இறந்த போது அவள் துடித்துப் போனாள் கடந்து விட முடியாத நினைவுச் சுமை.
    ஆனந்தன் மட்டக்களப்பு கொண்டாட வேண்டிய கலை இலக்கிய ஆளுமை
    அவன் நினைவாய் எவ்வளவோ பேசலாம் பேசுவோம்.
    மளையாள இசை மலையாள இலக்கியத்தில் மிகுந்த பரிட்சயம் உள்ளவன் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கும் ஆற்றலால் சில சிறுகதைகளை மொழி பெயர்த்துள்ளான் .இன்னும் அவன் இருந்திருந்தால் ஈழத்து இலக்கியத்துக்கு மேலும் வளம் சேர்த்திருப்பான்.மலையாள இசையை எனக்கு அறிமுகப் படுத்தியவனும் அவனே அவனிடமிருந்து மலையாள இசைப் பேழைகளை வாங்கி கொடுக்காநல் விட்டு அவன் நினைவாய் என் மட்டக்களப்பு வீட்டில்.இன்றும் அவன் நினைவுகளுடன் மலையாள இசையை விரும்பிக் கேட்கும் ரசிகனாய் நான் .
    வீட்டுக்கு வரும் போதெல்லாம் என்னைப் பாடச் சொல்லிக் கேட்பான்
    "சுகு அந்த ஆதம் காக்கா பாடலைப் பாடு" என்பான் கேட்டுக் கேட்டு சலிக்காத பாடல் அது
    "ஆதம் காக்கா ஆதம் காக்கா
    அவரைக் கண்டா சொல்லிடுங்கோ
    பூவரசம் கன்னி ஒன்று
    பூ மலர்ந்து வாடுதெண்டு"
    மறந்து போகுமா அவன் நினைவு
     
     

     
    2018ஆம் ஆண்டு எழுதியது
    தோழர் ஆனந்தன்
    நான் மட்டக்களப்பு வந்த பின் பல்கலைக் கழகத்துக்கு வெளியே பல நண்பர்கள் அறிமுகமாயினர் அவர்களில் ஆனந்தனும் ஒருவர். ஆரம்ப அறிமுகத்திலேயே நானும் அவரும் பல விடயங்களில் ஒத்த கருத்துள்ளவர்களாக இருப்பதை இனங் கண்டு கோண்டோம்.அதனால் அவருக்கும் எனக்குமான நெருக்கம் அதிகமாகியது.
    அவர்கள் இருந்த பார் வீதிக்கு பக்கத்திலேயே சில மாதங்கள் வாடகை வீடு அதனால் அவர் நடையாக வீட்டுக்கு வருவதும் நான் நடையாக அவர் வீட்டுக்கு செல்வதும் இலக்கியம் சினிமா கவிதை என உரையாடல்கள் நீள்வதுமாக பொழுது ஆரோக்கியத்தின் வழி பயணித்தது..
    ஆனந்தனின் மனைவி வத்சலாவும் என் மனைவி பிரமிளாவும் நெருக்கமான நண்பிகளாயினர் எ மகள் ஆனந்தனோடு ஒட்டிக் கொள்வாள் ஆனந்தன் அவளை மாலை நேரங்களில் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு மாமாங்க குளக்கரைக்கு கொண்டு போய் அவளுக்கு புதினம் காட்டி வருவதுமாக ஆனந்தனின் அன்பில் கரைந்தாள் என் மகள் .
    ஆனந்தனின் வீடு மாமாங்க கோயில் போகும் சந்தியில் மூலையில் திருவிழா வந்து விட்டால் நண்பர்களால் நிறைந்து வழியும் கலகலப்பாய் அந்த நாட்களின் முன்னிரவுப் பொழுதுகள் உரையாடல்களும் பாட்டும் என களை கட்டி நிற்கும் மட்டக்களப்பு கொம்பு பாடல்களை அடிக்கடி என்னை பாடச் சொல்லி ரசிக்கும் என் ரசிகனாய் எப்போதும் .என் மேடைப் பேச்சை பாராட்டி மகிழும் தருணங்கள் .
    .
    கொஞ்ச நாட்களில் நாங்கள் பெய்லி குரோஸ் வீட்டை வாங்கி குடி புகுந்த பின் ஆனந்தனின் தொடர்பும் எந்த குறையும் இல்லாமல் நீடித்த அன்பாய் நட்பாய் நிலைத்தது .
    ஆனந்தன் எப்போதும் பிளேன்டீ தான் கேட்பார் வீட்டில் என்ன இருக்கோ கேட்டு சாப்பிடுவார்
    மலையாள இலக்கியத்தில் மிகுந்த ஈடு பாடு காட்டிய ஆனந்தன் மலையாள இலக்கியங்கள் பற்றி நிறையவே அறிந்து வைத்திருந்தார் .மலையாள பாடல்கள் கேட்பது பிடிக்கும் நிறையவே மலையாளப் பாடல்கள் பதிந்த கெசற்றுக்கள் வைத்திருப்பார் அவர் மூலமாகவே மலையாள இசைக்கு நான் பரிச்சயமானேன்.
    மலையாள இலக்கியத்தின் செழுமையை அது பற்றிய அறிவை அகலிக்க ஆனந்தனுடனான உரையாடல்கள் எனக்கு துணை செய்தன .
    எங்கள் வீட்டு விறந்தையில் குப்புற அவரது வண்டி நசிய படுத்துக் கொண்டு மகளோடு விளையாடிய பொழுதுகள் இன்னும் மாறாத நினைவுகளாய் எப்போதும்
    மட்டக்களப்பு வாசகர் வட்டத்தினுடனான செயல் பாடுகளில் ஆனந்தன் காட்டிய ஆர்வமும் முன்னெடுப்பகளும் மட்டக்களப்ப்பின் நவீன இலக்கிய மரபில் புதிய வெளிச்சத்தை பாச்சியது என்றால் மிகையாகாது.
    முற்போக்கில் நம்பிக்கை கொண்ட ஆனந்தன் விமர்சனம் என வரும் போது தயவு தாட்சன்யம் பார்க்காமல் விமர்சிப்பார் இலக்கிய கூட்டங்களில் அவர் பேசும் அழகு தனி யாருக்கும் வாய்க்காத குரலும் அந்த நடையும்.
    ஆனந்தனின் நினைவுகளை எழுத எழுத இன்னமுமாய் அது நீளும் நெஞ்சம் மறக்க முடியா மட்டக்களப்பின் கலை இலக்கிய ஆளுமை ஆனந்தன்
    1995 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு அதிரடிப்படை முகாமுக்கருகில் துப்பாக்கி சூட்டில் சாகும் போதும் மற்றவர்க்காக தன்னுயிரை ஈந்த என் தோழன் அவன் நினைவு எப்போதும்

    நன்றி சுகுமார் தங்களுடன் கொண்ட புலமை நட்பையும் குடும்ப நட்டையும் நான் அறிவேன்.
    அநேகமான தடவைகள் நானும் அவருடன் வந்திருக்கிறேன்.
    உங்களுடன் உரையாற்றுவதற்கு அவருக்கு அலாதியான விருப்பம் இருந்தது.
    அவர் சொல்லுவார் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு நல்ல ஆழமான நவீன இலக்கிய புரிதலுடைய பால. சுகுமார் வந்திருக்கிறார் இனி நமது மாணவர்கள் பயனடைவார்கள்.
    துரதிர்ஷ்டவசமாக தங்களின் சேவை வரமுடியாமல் போய்விட்டது.
    நானும் அவர் நினைவாக ஒரு பதிவைப் போட்டிருக்கின்றேன்
    அதில் உள்ள புகைப்படம் தங்கள் வீட்டில் எடுத்தது

 

Monday 15 June 2020

"தியா" Diya

இன்று ஒரு கன்னடப் படத்துடன் உங்களை சந்திக்கிறேன்.

Image may contain: 4 people உங்களுக்கு கன்னடமும் தெரியுமா என நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.கன்னடம் தமிழின் சகோதர மொழி ஆனாலும் அது சமஸ்கிருத மயப் பட்டு நிற்கிறது.ஆனாலும் சப் ரைற்றில் துணையோடு திரைப்படம் பார்க்க மொழி அவசியமில்லை அதுவே நம்மோடு பேசும்.


உலகம் முழுவதும் காதலைப் பேசுகின்ற திரைக் காவியங்கள் வந்துள்ளன

அண்மைக்காலத்தில் வந்த படங்களில் கன்னடத்தில் வெளி வந்த
"தியா"
Diya
என்கிற படம் என்னைக் கவர்ந்ததாய் உள்ளது


Image may contain: 2 people, sunglasses, beard and hat
இத் திரைப்படம் பற்றிய பார்வையில் ஆண் நிலை நோக்கில் பெண்ணின் காதல் பேசப் பட்டிருப்பதாக பலர் விமர்சித்துள்ளனர்.
Image may contain: 2 people, text
என் நிலை நோக்கில் காதல் அதன் நோக்கு சரியாக சொல்லப் பட்டிருப்பதாகவே கருதுகிறேன்
ஒரு ரெயில்வே தண்டவாளத்தில் தொடங்குகின்ற கதை ரெயில்வே தண்டவாளத்திலேயே முடிகிறது மன பதகழிப்புடன் கடைசிக் காட்சிகள் நகர்கின்றன.
Image may contain: 3 people, text Kushee Ravi
Pruthvi Ambaar
Dheekshith Shetty
Pavithra Lokesh
ஆகியோர் நடிப்பில்
கே.எஸ்.அசோகா நெறிப்படுத்தியுள்ளார்



"எக்க தவசக்க அபி Eka Dawasaka Abi"

சிங்கள மொழி திரைப்படம்

 "எக்க தவசக்க அபி Eka Dawasaka Abi"

சிங்கள மொழியிலான திரைப்படங்களை முதலில் தமிழர்களே தயாரித்தவர்கள் என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.ஆரம்ப கால திரைப் படங்கள் தென்னிந்திய பாணியில் அமைய அறுபதுகளில் லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் போன்றவர்களின் வருகை தனித்துவமான சிங்கள மொழிப் படங்களை அறிமுகம் செய்து கலைதுவ நோக்கு முதன்மைப் படுவதைக் காணலாம்.


Image may contain: 2 people, outdoor and close-up












காலப் போக்கில் உலக அளவில் பேசப் படும் பல படங்கள் உலகப் பட விழாக்களில் பரிசு பெற்று சிங்கள திரை உலக்குக்கு பெருமை சேர்த்தன.

Image may contain: 1 person, standing, outdoor and nature
இந்தி சினிமாவின் பாதிப்பு தமிழ் சினிமாவின் பாதிப்பு என மாறி மாறி ஜனரஞ்சக படங்களின் வருகையை உறுதிப் படுத்தினாலும் பல கலைப் படைப்புகள் சிங்கள திரை உலகை தூக்கி நிறுத்தின எனலாம்.

அண்மைக் காலத்தில் சிங்கள திரைப் படங்கள் கதை சொல்லும் முறை நடிப்பு ஓளிப்பதிவு என புதிய நகர்வுகளில் பயணிக்கிறது புதிய நடிகர்கள் அனாயசமாக நடிப்பை வெளிப் படுத்தி செல்கின்றனர் .
இந்த வகையில்

"எக்க தவசக்க அபி Eka Dawasaka Abi"

Image may contain: 2 people, text and close-upImage may contain: 2 people, people standing, plant, tree, outdoor and nature
Image may contain: 2 people, people standing, people sitting and outdoor விபுல சமரசேகர எனும் எழுத்தாளரின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு,அனுராதா ஜெயசிங்கே திரைக் கதை நெறியாள்கை செய்துள்ளார்.
புபுது சதுரங்க
நயனதாரா விக்கிரமாராச்சி
வீணா ஜயக்கொடி
பிரதான பாத்திரமேற்று நடிக்க

ஒரு காதல் கதை சொல்லப் படுகிறது வழமையான கதை என்றாலும் சொல்லப் படும் விதத்தில் வித்தியாசமாக நம்மோடு பேசுகிறது.

Sarbjit சர்பஜித்

ஹிந்தி மொழியியிலிருந்து

Sarbjit
சர்பஜித்

கடந்த ஐந்தாண்டுகளில் இந்தி சினிமா சில மாற்றங்களைக் கண்டிருக்கிறது என்று நான் சொல்வேன் .

தமிழ் சினிமா பெரும்பாலான படங்களில் கதா நாயகிகள் வெறும் அழகுப் பொம்மைகளாகவே வலம் வருவார்கள் ஒன்றோ இரண்டோ நயனதாரா படங்களை விட முழு தமிழ் சினிமாவுக்கும் கடந்த ஐந்தாண்டுகளை கண்டடைய முடியும்.
Image may contain: 1 person, standing, outdoor and nature
அண்மையில் இந்தியில் வெளிவந்த பல படங்கள் குறிப்பாக அலியா பட்,தீப்சி நடித்தவற்றை குறிப்பிட முடியும் அந்த வகையில் ஐஸ்வர்யராவை முதன்மைப் பாத்திரமாக கொண்ட சர்பஜித் திரைப்படம் ஒரு உண்மைக் கதையை பேசு பொருளாகக் கொண்டு வெளி வந்திருக்கிறது.
Image may contain: 1 person, outdoor
ஐஸ்வர்ரராய் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விடுகிறார் சகோதரன் அவர் தீவிரவாதியாக சித்தரிக்கப் பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார்.
Image may contain: 1 person, standing and outdoor
தன் சகோதரனின் விடுதலைக்காக போராடும் பெண்ணாக ஐஸ்வர்ராய் வருகிறார்.
Image may contain: 2 people, close-upImage may contain: 2 people, close-up and outdoor இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையை மனிதாபிமானத்துடன் அணுகுகிறதது இப்படம்

லஜ்ஜா Lajja

தெலுங்கு தேசத்திலிருந்து

லஜ்ஜா
Lajja
Image may contain: 2 people, people standing and text
என்ற திரைப்படம் பொதுவான அபிப்பிராயம் தெலுங்கு படங்கள் அடி தடி அற்புதம் மாயாஜாலத்துக்கு பேர் போனதென்று ஆனாலும் அவ்வப்போது நல்ல பல திரைப்படங்கள் முகம் காட்டுவதுண்டு அந்த வகையில் தெலுங்கு மொழியில் புகள் பெற்ற எழுத்தாளர் சலம் என்கிற வெங்கடாசலத்தின்



"மைதானம்"Maithanam" நாவலை தழுவி எடுக்கப் பட்ட படம் லஜ்ஜா Lajja
வாழ்வு காதல் என அதன் முரண்பாடுகளின் வழி புதிய அனுபவங்களை இப் படம் பேசுகிறது பலரும் தொடாத விசயங்களை தொட்டுச் செல்கிறது படம்.
நரசிம்ம நந்தி மதுமிதா இருவரும் பிரதான பாத்திரங்களை ஏற்க நரசிம்ம நந்தி திரைக்கதை இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்க ஒரு குறிப்பிட்ட கிராமத்தை சுற்றியே கதை நகர்கிறது.


காம்போஜி Kamphhoji

மலையாள தேசத்திலிருந்து

காம்போஜி
Kamphhoji

மலையாளத் திரைப் படங்கள் பொதுவாக அவர்களது பாரம்பரியக் கலைகளையும் பண்பாட்டையும் பெரும்பாலான திரைப்படங்களில் ஏதோ ஒரு வகையில் இசை நடனம் சடங்குகள் நம்பிக்கைகள் என வெளிப்படுத்தி வந்துள்ளதை காண முடியும்.

கேராளாவின் பாரம்பரிய முகத்தை வெளிப் படுத்தும் கதகளி நடனத்தை மையப் படுத்தி பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.பெரும்பாலான நடிகர்கள் "கதகளி " ஆட்டக் காரர்களாக தோற்றம் காட்டியுள்ளனர்.
Image may contain: 2 people, text
ஆட்டக் கதா,வானப்பிரஸ்தம்,களி அச்சன்,ரங்கம், என்பன கதகளியை பிரதானப் படுத்த,காம்போஜி கதகளியையும் மோகினி ஆட்டத்தையும் மையப் படுத்தி உள்ளது.

"காம்போஜி " 1970ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.
வினித் லக்ஸ்சுமி கோபாலசாமி இருவரும் பிரதான பாத்திரமேற்க.
குஞ்சுண்ணி,உமா,நாராயணி என்ற மூன்று பாத்திரங்களை சுற்றி நகர்கிறது கதை.

Image may contain: 2 people, people standing and outdoor
கதகளி மோகினியாட்டம் இரண்டு மரபு வழி ஆட்ட மரபுகளின் இணைப்பில் கலைத்துவ வெளிப்பாடாய் அமைகிறது.



வினித் என்கிற ஆட்டக்காரனின் அற்புத அபிநயங்களிலும் லக்சுமி என்கிற நடன தாரகையின் பாவமும் நளினமும் நம்மை கட்டிப் போடும் காட்சிகளாய் படம் முழுவதும் விரவிக் கிடக்கிறது.

ஒரு கலை வடிவத்தை எப்படி திரை மொழியாக்க முடியும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்தப் படம்.
நடன கலைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்

நடை வழிக் கவிதை

நடை வழிக் கவிதை

வெண் பனி தூவும்
நாட்கள் போய்
வெள்ளைப் பூக்கள்
விரியும் காலம் இது


கொள்ளையிடும் அழகில்
கொரோனா கூட மறந்து போம்
கொல்லென்று சிரிக்கும் பெண்ணாய்
மல்லிகை போல் இங்கு

சில்லென குளிர் காற்று
இங்கு எப்போதும்
நில்லெனச் சொல்லி
நிலை மயக்கும் பூக்கள்

தேன் சுவை நாடும்
வண்டுகள் கூட்டம்
இங்கும் விரவிக் கிடந்து
மதுவுண்டு மயங்கிச் சாகும்

நடை வழிக் கவிதை

நடை வழிக் கவிதை

நிலமும் பொழுதும்
Image may contain: Balasingam Sugumar, standing, outdoor and nature










நிலமும் பொழுதும்
நெஞ்சம் கிளர
நெடுக நெடுக


நீர் வழிப் பாதை

நடக்க நடக்க
நீளும் வயல்கள்

கோதுமை இங்கு
கொழுத்து செழித்து
Image may contain: one or more people, people standing, sky, outdoor and nature






நீன் நதியாள்
நீண்டு கிடக்கிறாள்

இந்த பூமியெங்கும்
வளைந்து நெளிந்து
Image may contain: 1 person, standing, sky, cloud, mountain, outdoor and nature வாய்க்கால் எங்கும்
வண்ணப் பூக்கள்

தாய் நிலம் நோக்கி
ஏங்கும் மனசு





அன்னையர் தினம்

அன்னையர் தினம்

Image may contain: 1 person, close-up and outdoor
உன்னில் இருந்து
உதிர்ந்த முதல் பூ நான்
பொன்னாய் மணியாய்
பவளமாய் இன்னும் பலதாய்
சொல்லிய தாலாட்டில்
மண்ணின் சொர்க்கமாய்
உன் மடி கண்டேன்



Image may contain: 2 people, including Balasingam Sugumar, people standing கன்னத்தில் முத்தம்
கைகளில் அணைப்பு
கிண்ணத்தில் அன்னம்
வண்ணம் வண்ணமாய்
எண்ணி எண்ணி
சுவைக்க இனிக்க
அம்மா உன் நினைப்பு
கற்ற்ல் எழுதல்
காவியச் சுவையில்
கதைகள் சொல்லல்
என எல்லாம்
உன்னில் இருந்து
என்னுள் செரித்த
மந்திர வித்தை
மாய நூல் ஏணி
வானில் இருந்து
வந்து போகும்
அதில் நான் ஏறி
ஆகாசத்தை அளந்து
இறங்கிய
அற்புத கதைகள்
எத்தனை சொன்னாய்


Image may contain: 2 people, including Balasingam Sugumar, people standing and outdoor
ஒவ்வொரு நாளும்
உன் குரல் எனக்கு
உற்சாக பானம்
ஞானப் பால் தந்த
மோனச் செருக்கு நீ
மெளனத்தின் மொழியில்
எவ்வளவு
அர்த்தங்கள் உன்னதமாய்





Image may contain: one or more people and people sitting நீயும் நானுமாய்
நெடுக நெடுக
Image may contain: 3 people, including Balasingam Sugumar, people standing and outdoor

நடை வழிக் கவிதை

நடை வழிக் கவிதை

காற்றின் தாலாட்டில்
கண்ணுறங்கா கோதுமையாள்
சோற்றுக்கு பதிலாக இங்கு
சுகம் தரும் சுந்தரியாள்


கீற்றுக் கதிர்களினால்
கிளர்ந்தெழும் பெரு வளத்தாள்
நேற்றும் இன்றும் என்றும்
நிலம் காட்டும் பெருவுடையாள்

முற்றி முறுகித் தான் வெடித்து
பற்றிய வெளியெல்லாம்
பொன்னாய் பரவி நிற்பாள்
பூமியவள் மகிழ்ந்திருக்க

நடை வழிக் கவிதை

நடை வழிக் கவிதை

கோதுமையின் பூ விரிப்பில்
குதுகலித்துக் குருவியெலாம்
பாய் விரித்துப் படுத்திருக்கு
பரந்த இந்த வயல் வெளியில்


நான் இருந்து ரசித்திடவே
நல்ல தமிழ் எனக்கிருக்கு
முப்பாட்டன் வழியினிலே
மூத்த தமிழ் உடன் இருக்கு

கா விரிந்த சோலையிலே
பூ அவிழ்ந்து மணம் பரப்ப
புன்னகையில் மைனாக்கள்
வாய் திறந்து பாடுமிங்கு

நடை வழிக் கவிதை

நடை வழிக் கவிதை

நீரோடும் இங்கு
ஊரோடு தான் வளைந்து
தேரோடும் வீதி போல
வேரோடும் பயிர்க் கூட்டம்


காரோடி வயல்கள் எல்லாம்
கரு முகில்கள் தான் சூழ
வாரோடி நீர் காட்டும்
மார்ச் எனும் மகிளூரில்

பேர் போன ஊர் இது
பெரும் வயல்கள் வளத்தினிலே
சார் சாராய் பயிர் வளரும்
சனம் இங்கு நல் வாழ

முள்ளி வாய்க்கால் முடிந்து போன கதை அல்ல

முள்ளி வாய்க்கால் முடிந்து போன கதை அல்ல

வரலாறு முழுவதும்
துயரத்தின் சுமைகளை
சொல்லி விட்டு சென்ற
ஒப்பாரிப் பாடல்

ஈழம் எதிர் கொண்ட
இடர் களையா நாட்கள்
போர் தின்று போன
போராட்ட வாழ்வுதனை

யார் கொண்டு போனார்
தேர் போன்ற வாழ்வெல்லாம்
திசை மாறிப் போன நாட்கள்
பூவென்றும் பிஞ்சென்றும்
பழுத்துதிரா பழமெல்லாம்
வாழ்வின்றிப் போன
வகையறியா நாட்கள்

மே 18

மே 18

பாவுற்று நாம் பாட
மேவுற்று நிற்கும் மே 18
சோர்வுற்று போனோமா
சோகங்கள் நெருப்பாக


தாழ்வுற்று நாம் வீழ
நேர்வற்று போனோமா
நீர் வற்றிப் போக
அழிவுற்ற அழுகையில்

அழுகை நம் மொழியல்ல்
எழுகை நம் வழி
விழி எழு என்று
சோர்வற்ற நாளாய் மே 18

நடை வழிக் கவிதை

நடை வழிக் கவிதை

கரும் பச்சை விரிப்பும்
காற்றின் சிரிப்பும்
ஆற்றோடு சேர்ந்தூரும்

அலைகளின் இருப்பும்


நேற்று இந்த வழியில்
கானகக் கோழியொன்று
கதை சொல்லி நின்றது
நாற்றின் நிழலில்

சற்றுப் பொறு என்று
சந்த கவி பாட
என் பாட்டன் இடை மறித்தான்
முன்னொரு காலத்து கனவாய்

ஒ...என் இனமே

ஒ...என் இனமே

ஓ..என் இனமே
உன் சினம் கொள்
பார்வை
அமரிக்க ஆதிக்கத்தை
அடி பணிய வைக்கும்
நாள் வரும்

Image may contain: one or more people
கொரோனாவை விட
கொடிய நோய்
உன்னைச் சூழ
அடங்க மறு
நீதியின் குரலில்
நீளும் உலகிது
மூச்சு விட முடியவில்லை
என்ற ஏக்கக் குரல்
எங்கள் மூச்சுக்களிலும்
உலகம் முழுவதும்
சகோதரனே
உன் மூச்சாய்

பண்டிதர் அந்தோனி.சவரிமுத்து குரூஸ்

    நம்மவர்களை நாம் அறிவோம்

    மூதுரின் முத்தாய் முகிழ்த்த மூத்த தமிழ் அறிஞன்
    பண்டிதர் அந்தோனி.சவரிமுத்து குரூஸ்

    Image may contain: 1 person, glasses, text that says "பண்டிதர். அந்தோனி சவரிமுத்து குருஸ்"
    நில வளமும் நீர் வளமும் கொண்ட மூதூர் தமிழ் வளமும் கொண்டு தன்னை தகை சால் சான்றோர்களால் பெருமைப் படுத்தி நின்றது அத்தகைய பெருமையுறும் சான்றோனாய் பண்டிதர் அ.சவரி முத்து அறியப் படுகிறார்.
    மூதூர் புனித அந்தோனியார் மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபர்.

    ஆசிரியராக அதிபராக நற்பணியாற்றி தமிழ் இலக்கியம் இலக்கணத்தின் பால் காதல் கொண்ட தமிழ் அறிஞன் அவர்.இலக்கிய இலக்கண்ப் புலமை ஒரு சேரப் பெற்ற தமிழ் ஆளுமை.
    மூதூரின் மூத்த எழுத்தாளர் வ.அ.இராசரெத்தினம் அவர்கள் பண்டிதர் அ.சவரிமுத்து பற்றி இப்படிக் குறிப்பிடுவார்.
    "நான் எழுதியவைகளையெல்லாம் படித்து ரசித்த வர்களில் மூதூரைச் சேர்ந்தவரும் எனது மாமன் முறை யினருமான பண்டிதர் அ. சவரிமுத்து குரூஸ் அவர்கள் முதன்மையானவர். நான் எஸ். எஸ். சி. படித்துக் கொண்டிருக்கையிலேயே அவர் ஆசிரி யரானார்.எஸ். எஸ். சி. வகுப்புக்கான இலக்கியப் பாடநூல்
    முழுவதையும் அவர் எனக்கு ஒரே ஒரு மாதத்திற்குட் படிப்பித்தார்
    .
    அவரில் உள்ள குறிப்பிடத்தக்க விசேடம் என்ன வென்றால் அவர் பத்தாம் பசலிப் பண்டிதர் அல்ல. அகநானூறையும் படிப்பார், அதே நேரத்தில் ஆனந்த விகடனையும் படிப்பார். ஆனந்த விகடனிற் தேவன் எழுதிய "துப்பறியும் சாம்பு’ என்ற நாவலை மிகவும் ரசித்துப் படித்தார். எல்லாத் துப்பும் சாதாரணமா னதாக எதிர்பாராத வகையிற் கண்டு பிடிக்கப்பட் டது போல எழுதப்பட்டிருப்பதுதான் தே வ ணி ன் திறமை. அந்தப்பாணி புதியது. அற்புதமானது என்று என்னிடம் புகழ்ந்தார்.
    இலங்கையர் கோனிடமும் அவர் நெருங்கிப் பழகி கினார். இலங்கையர் கோனின் யாழ்பாடி என்ற நாட
    கத்திற்கு, இலங்கையர் கோன் கேட்டுக் கொண்டபடி அவர் சில பாடல்கள் எழுதிக் கொடுத்தார்.

    நான் டெணியாயாவிலும் மொறட்டுவாவிலும் ஆசிரியனாக இருந்த காலத்தில் எழுதியவைகளை எல் லாம் ஒவ்வோர் விடுமுறையும் வீட்டுக்கு வந்தபோது அவருக்கு வாசித்து காட்ட வேண்டும். அதுவும் நான் உரத்துப் படிக்க அவர் கேட்க வேண்டும் என் பது அவர் ஆசை.
    எனக்கு எப்போதுமே உரத்து வாசிக்கப் பிடிக் காது. என் வாசிப்பெல்லாம் உதடுகள் அசையாமலே "Barking at the print' அச்சைப் பார்த்துக் குரைத்தல் என்று யாரோ எழுதி யிருக்கிறான்.

    ஆனாலும் என்ன செய்வது? நான் அவருக்காக உரத்து வாசிப்பேன். அவர் என் கதைகளை ஆர்வத் தோடு கேட்டு ரசிப்பார்.
    நான் மாப்பஸான் பற்றி வானொலியில் நிகழ்த் திய பேச்சுக்குப் பின்னால் என்னை 'மாப்பஸான் என்றே அவர் அழைப்பார் . என் வீட்டில் எல்லாருமே அவரை ரசிகர் என்றே அழைப்பார்கள்.
    நான் மூதூரில் விடுதலைக்கு வரும் காலங்களில் எல்லாம் அவரோடுதான் என் பெரும் பொழுது கழியும்.
    அவர் என்னைச் செய்யுள் இலக்கணம் கற்கும்படி மிகவும் வற்புறுத்தினார். நானும் அவரிடம் அதைப் படித்தேன், ஆனால் அதில் அத்தனை சிரத்தை காட் டவில்லை. இது அவருக்குப் பெரிய மனக்குறையாகவே இருந்தது."
    Image may contain: one or more people and people standing பண்டிதர் நிக்கிலஸ் அவர்கள் தனது நான் கண்ட பாரதி எனும் நூலில் தன்னை இந்த நூல் எழுதத் தூண்டியவர் பண்டிதர் அ.சவரிமுத்து என குறிப்பிடுகிறார்.அத்தோடு பண்டிதர் நிக்கிலஸ் பற்றிய அறிமுகக் குறிப்பொன்றையும் எழுதியுள்ளார்

    தன் தமிழால் மற்றவர்களையும் ஊக்கப் படுத்தி அதன் பால் ஈடுபட வைக்கும் பெருந்தன்மைக்கு இது ஒரு எடுத்துக் காட்டு எனலாம்.
    மூதூர் மண் பெருமையுறும் தமிழ் அறிஞன் பண்டிதர் அ.சவரிமுத்து குரூஸ் அவர்கள்

பண்டிதர் வஸ்தியான் நிக்கிலஸ் தமிழ் அறிந்தோன்

நம்மவர்களை நாம் அறிவோம்

மூதூரின் மூத்த தமிழ் பண்டிதர்
பண்டிதர் வஸ்தியான் நிக்கிலஸ்

தமிழ் அறிந்தோன்

ஒரு காலத்தில் பண்டிதர்கள் பலர் வாழ்ந்து சிறப்பு பெற்ற இடமாக மூதூர் இருந்திருக்கிறது என்பதை மூதூரின் கலை இலக்கிய வரலாறு பேசுகிறது.இவர்கள் பற்றி இலக்கிய கலாநிதி.வ.அ .இராசரெத்தினம் அவர்கள் தன் இலக்கிய நினைவுகள் நூலில் குறிப்பிட்டு செல்கிறார்.அவர்களில் பண்டிதர் நிக்கிலசும் ஒருவர்.தமிழ் மீதும் பாரதி மீதும் காதல் கொண்ட ஒரு தமிழ் ஆசானாய் அறியப் படுகிறார்.ஆசிரியராக அதிபராக கல்விப் பணியில் மூதுருக்கு பெருமை சேர்த்தவர்களில் ஒருவர்.

ஈழத்து தமிழ் இலக்கிய உலகுக்கு அளித்த பெரும் கொடையாய் அமைவது இவர் எழுதிய "நான் கண்ட பாரதி" எனும் நூல்.மூதூர் மண் பெருமை கொள்ளும் வகையில் இந்த நூலை அவர் ஆக்கியுள்ளார் இதனை ஒரு ஆய்வு நூலாகவே அறிமுகப் படுத்துகிறார்.அதில் பல்வேறு தலைப்புகளில் பாரதியை தன்னுள் வாங்கி நுண்ணிதான விபரிப்புகளுடன் இந்த நூல் அவரது பண்டித தமிழ் ஆளுமையை வெளிப்படுத்தி நிற்கிறது.பாரதி பற்றி தீவீர வாசிப்பும் தேடலும் ஆய்வுகளும் ஈழத்தில் எண்பதுகளில் பாரதி நூற்றாண்டை ஒட்டியே முனைப்பு பெறுகின்றன.ஆனால் 1965ம் ஆண்டிலேயே "நான் கண்ட பாரதி" எனும் நூலை வெளியிட்டு ஈழத் தமிழ் இலக்கிய உலகுக்க்கும் மூதூர் மண்ணுக்கும் பெருமை சேர்க்கிறார்.
நான் கண்ட பாரதி நூலில் இவர் எழுதிய சமர்ப்பணம் அவர் தமிழ் ஆளுமைமையை சொல்லி நிற்கிறது

"சமர்ப்பணம்
சீர்பரவு பாரதியின் சிறப்புறுநற் போதகத்தை
பேர்காத லோடெழுதி பெருமகிழ்வுற் றிந்நூலை
ஏர்மருவு தந்தையர்க்கா ஏதமிளாத் தாயருக்கா
பேர் பரவு மெந்தன் பெறற்கரிய சோதரற்கா
மைந்தருக்கா மகளிருக்கா யாருக்கர்ப் பணிப்பதென்று
சிந்தனையி லே யாழ்ந்து செயல்மறந் திருந்துவிட்டேன்.
கண்மூடி னேனே யான் கடுவுறக்கங் கொண்டேனே
மண்ணறிவு மோ வெந்தன் மாசில் தரிசனத்தை
விண்ணி லிருந்து இழிந்துவந்த பூங்கொடியாள்.
அன்ன நடைநடந்தாள் அருகில் வந் தமர்ந்துவிட்டாள்.
வன்ன இடையை வனிதை முகமதியை
கருங்குவளை வாள் விழியைக் கவுள்மாவின் நன்கனியை இன்னமுதலாய
இன் பத் திருவுருவை இன்னாளென் றேயறியா தேங்கிநின் றே யானும் பொன்னனையாள் தனை நோக்கிப் பொன்னே நீர்
யாரென்றேன்

முத்து நகை த வள முகமலரைச் சற்றுயர்த்தி தத்துவரிச் சேல்விழியைச் சற்றே யுருட்டியுங்கள் நெஞ்சச் சுனையதனில் நின்றலர்ந்த தாமரையில் என்று மிருக்கின்றேன் எனையேன் மறந்தீர்கள்.
என்றவுரை யென்றன் இருசெவியி லேறுமுன்னே கண்டுமொழிக் காரிகையைக் கண்டுகொண்டேன் யானும் துள்ளி யெழுந்தேன் அத் துடியிடையைத் தானெடுத்தேன் பதினோராண்டின் முன் பறந்துசென்ற பைங்கிளியே, மதிவதன மானே யென் மாசில் மனோன்மணியே
என்னுடலி லென்னாவி யுள்ளளவும் நான் மறவேன்
என்வேண்டு மானுலும் ஏந்திழைகே ளென்றேற்கு பொன்வேண்டாம் புவனப் பொருளொன்று

மேவேண்டாம் என்று மிறவாத இன்புகழே வேண்டுமென்று இன்முகத்தையே காட்டி இணைமலர்க்கை நீட்டிநின்றாள் நன்றே நீர் கேட்டீர் நவையிலா நாயகியே இன்றே தருகின்றேன் இன்பப் பெயர் வாழ என்றளித் தேனவட் கிப்புதுப் பனுவலை. உவப்புடன் அளித் திட்ட இன்பப் பனுவல் பூவில வட் கரிய சமர்ப் பணம்,"

நான் என் சிறு வயதிலிருந்தே அறிவேன் 1964ஆம் ஆண்டு சேனையூர் மத்திய கல்லூரியில் நடை பெற்ற பாரதி விழாவில் அவர் பேச்சே எனக்கு முதல் அறிமுகம் அந்த பேச்சு ஒரு புகை போல ஞாபத்தில் உள்ளது
"நான் கண்ட பாரதி " எனும் நூலை எழுதுவதற்கு சேனையுரில் நடந்த அந்த விழாவே காரணமாகியது என்பதை இப்படிக் கூறுகிறார்
.
"சென்ற புரட்டாதி மாதம் பன்னிரண்டாந் திகதி தி/சேனையூர் அரசினர் தமிழ்க் கலவன் வித்தி யாலயத்தில் சேனையூர்க் கலாமன்றத்தினரின் ஆதர வில் நடந்த பாரதி விழாவுக்கு நானும் ஒரு பேச்சாளனாக அழைக்கப் பட்டிருந்தேன். என்னுடன் பல பண்டிதர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் கூட வந்திருந்தார்கள் விழாவைச் சிறப்பிப்பதற்காக.

விழா ஆரம்பிக்கப்பட்டபொழுது என் பேச்சுக்கு உரிய இடம் வரவே நான் கொடுத்த தலையங்கத்தின் கீழ் மிக நீண்டதோர் சொற்பெருக்காற்றி னேன். எனினும், என்பேச்சுக்கு நேரம் போதவில்லை. மறுபேச்சாளர்களுக்கும் இடங்கொடுக்க வேண்டும். கதம்ப நிகழ்ச்சிகளும் இருக்கின்றன. அவைகளுக்கும், இடம் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால் என் பேச்சைச் சுருக்கிக்கொண்டேன். விழாவும் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது.
Image may contain: one or more people and text
மறுநாள் எனது இல்லத்திற்கு சில அன்பர்கள் வந்தார்கள். அவர்களுட் சிலர் முதல்நாள் பாரதி விழாவில் நான் பேசியபேச்சை விதந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவ்வமயம் எனது அருகில் இருந்த மூதூரின் முதிர்தமிழ் அறிஞரும், சிறந்த இரசிகரும், பாடசாலைத் தலைமை ஆசிரியருமான திருவாளர் அ. சவரிமுத்து என்பவர் என்னைப் பார்த்து, நீர் பேசிய தலையங்கம் என்ன என்று அமைதியுடன் கேட்டார். நான் அதற்கு நான் கண்ட பாரதி என்று பதிலளித்தேன். என்ன என்ன தலைப் புகளின் கீழ் உரையாற்றினீர் என்று மீண்டும் என்னைக் கேட்டார்.

நானும் உடனே பதில் கூறினேன். என் பதிலைக்கேட்ட அவ் ரசிகர் ‘தம்பி! தமிழ்த் தாயின் அபிமான புத்திரன் பாரதி, அவன் கொள் கைகளை நற்றமிழ்த்தேன் விட்டுரைத்து நம் தமிழ்த் தாயின் நன்னுதலில் தி லகமிட்டு அவளைத் தன் மானத்துடன் தலை நிமிர்ந்து நடக்கச் செய்தல் உம் தலையாய கடன். நீர் பேசிய ஒவ்வொரு தலைப் புகளும் அதியுன்னத திரவியங்கள். ஆகையால், உடனே அவைகளைத் தொகுத்தெழுதி ஒரு ஆராய்ச் சிக்கட்டுரையாக வெளிவிடும். அதனல் தமிழ் உல கம் பலனடையும்' என்று கூறி என்னை ஊக்குவித்தார்.

அந்த இரசிகரின் ஊக்குதலால் உந்தப்பட்ட நான் மார்கழி விடுதலையில் மிகக் குறுகிய காலத்தில் இவ்வாராய்ச்சிக் கட்டுரைகள் அனைத்தையும் எழுதி, என்னை ஊக்குவித்த இரசிகரை வரவழைத்து அவரி டம் காட்டினேன். இக்கட்டுரைகளை முற்ற முடிய வாசித்த அவ்விர சிகர், அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயன்’ என்பதற் கமைய உமது கட்டுரைகள் மிக நன்றாய் அமைந்து இருக்கின்றன"

1964ஆம் ஆண்டிலேயே சேனையூர் தமிழ் கலா மன்றத்தின் பெரு விழா பாரதி விழா ஈழத்து கலை இலக்கியப் பரப்பில் சேனையூருக்கு பெருமை சேர்த்து நிற்கிறது.

மூதூரின் மூத்த தமிழ் அறிஞரான பண்டிதர் நிக்கிலஸ் கொண்டாடப் படவேண்டியவர்.அவர் எழுதிய "நான் கண்ட பாரதி " நூல் மீள் பதிப்பு பெறவேண்டும்.

பால.சுகுமார்
மேனாள் புல முதன்மையர்
கிழக்குப் பல்கலைக்கழகம்

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி