வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 30 April 2018

உலக நாடக நாள் மார்ச் 27 2018- 2 கிழக்குப் பல்கலைக் கழகத்தில் உலக நாடக விழா உருவான பின்னணி

உலக நாடக நாள் மார்ச் 27 2018- 2

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் உலக நாடக விழா உருவான பின்னணி

1995ஆம் ஆண்டு ஒரு மாலைப் பொழுதில் மார்ச் 27ஆம் திகதி கவிஞர் ஆனந்தன் வீடு அவர் வீட்டில் ஒரு பன்னிரண்டு அங்குல கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி பெட்டி .அவர் வீடு அமைந்திருக்கும் அமிர்தகழி அங்கு அவர் தன் ரீவி அன்ரனாவை உயர்த்தி கட்டியிருந்தார் அதனால் அவர் வீட்டில் இந்திய தூரதர்சன் தெளிவாய் தெரியும் அன்றும் நாங்கள் மலையாள கவிதைகள் பற்றி பேசிக் கொண்டிருக்க கோகிலா ஒரு இஞ்சி தேத்தண்ணியை குடித்துக் கொண்டு உரையாடல் சுவாரஸ்சியமாக நகர்கிறது .

தொலைக் காட்சி உலக நாடக தினம் என்ற அறிவித்தலோடு பேராசிரியர் ஆறுமுகத்தின் "கருஞ்சுழி" நாடகத்தை ஒளி பரப்புகிறது.நானும் ஆனந்தனும் உசாரானோம் தேத்தண்ணி மேலும் சுவையயை தந்தது ஒரு வித்தியாசமான நாடக மொழி இதுவரை நான் பார்ற்ற நெறியாள்கை செய்த நாடகங்களிலிருந்து அது வேறு பட்டு நின்று உடல் மொழி சார்ந்து நாடக அனுபவத்தை தந்தது. ஆனந்தனும் பரவடப் பட்டு போனார் பின்னாளில் அதே கருன்சுழி நாடகத்தை மட்டக் களப்பு இந்துக் கல்லூரி மாணவர்களை க் கொண்டு வெற்றி கரமாக மேடையேற்றிய போது அதைக் காண ஆனந்தன் இருக்கவில்லை அந்த 1995 ஆம் ஆண்டிலையே புதுக்குடியிருப்பு கண்ணி வெடி சம்பவத்தின் பின் நடந்த இராணுவ துப்பாக்கிச் சூட்டில் இறந்து போன துயரம் .ஒவ்வொரு நாடக நாள் வரும் போதும் ஆனந்தன் நினைவும் என்னோடு பயணிக்கும்.
Image may contain: one or more people, people on stage and wedding
அடுத்த நாளே நான் பேராசிரியர் மெளனகுரு அவர்களிடம் பகிர்ந்து கொள்ள உலக நாடக நாள் தொடர்பாக நாங்கள் செயால் பட 1996ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை உலக நாடக நாளை கொண்டாடுகிறது.மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில் புத்தகக் கண்காட்சி கருத்தரங்கு அரங்க நிகழுவுகள் என நாடக விழா புதிய அனுபவத்தை தருகிறது

Bharatha Kalalaya
Bharatha Kalalaya அந்த நாடகம் நடக்கும்போது நான் இந்துக்கல்லுாியில் இருக்கிறேன் அருமையான நாடகம்
Karunchuzhi Arumugham
Karunchuzhi Arumugham நன்றி கருஞ்சுழி நினைவை பகிர்ந்தமைக்கு. நாளை உலக நாடக தினம் .கடந்த மாதம் பெங்களுருவில் 8 Theatre Olympics India 2018 நடிகர்களுக்கு அனுமதி இல்லை நாடகம் நிகழ்த்தி வந்த களைப்பு தீரவில்லை அதனால் நாளை ஓய்வு
Maunaguru Sinniah
Maunaguru Sinniah முதன் முதலில் மட்டக்களப்பு இந்துக்கலூரியில் பாட்சாலை மாணாக்கரை வைத்து தயாரித்த கருஞ்சுழி நாடகம் பாலசுகுமாரின் திறமைகளைக் காட்டிய ஒரு நாடகம்.அது பின்னர் கிழக்குப்பல்கலைக்க்ழகம், பேராதனைப்பல்கலைக்க்ழகம் முதலான இடங்களில் எல்லாம் மேடையேறியது. இதனால் இதனை எழுதிய ஆறுமுகமும் பரவலாக அறிமுகமானார். பாலசுகுமார் அர்ப்பணிப்புமிக்க ஒர்ர் நாடகக் கலைஞன்.உலக நாடக தினவிழாவுக்கான ஆலோசனைகளை எனக்கு வழங்கி அதனை 1994 இலில்ருந்து தொடர்சியாக கிழக்குப்பல்கலைக்க்ழகத்தில் நடத்த எனக்கு வலக்கரமாக விளங்கியர்.அவரும் அவர் மனைவி பிரேமிளாவும் இரவுபகலாக நின்று உதவுவார்கள்.பானைகளுக்கு வற்ணம் தீட்டி ஒழுங்கமைப்பதில் பிரமிளாவின் பங்கு அளப்பரியது.அந்தக்கூட்டு ஒத்துழைப்புகள் இல்லாவிடில் நாம் சிறப்பாக அவற்றை நடத்தியிருக்க முடியாது.உலக நாடக தினத்தில் நான் அந்த நாடகத் தம்பதியினரை நினைவுகூருகின்றேன்.சுகுமாரின் திறமைகள் வெளிப்பட லண்டன் உகந்த இடம் அல்ல.எனினும் அனைவரும் காலத்தின்,இடத்தின் சூழ் நிலையின் கைதிகளே.நல்லனவற்றை நினைத்து இன்புறுவோம்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி