வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 30 April 2018

பேராசிரியர் கைலாசபதியின் 85 ஆவதுபிறந்த நாள்

பேராசிரியர் கைலாசபதியின் 85 ஆவதுபிறந்த நாள்

யாழ் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய சிற்பி அவர் பார்த்து பார்த்து ஒரு சிற்பத்தை செதுக்குவது போல பல்கலைக் கழகத்தை அதன் கல்விசார் புலங்களை வடிவமைத்தவர் தீர்க்கதரிசனம் மிக்க செயல் பாடே1974 ஆம் ஆண்டு யாழ் பலகலைக் கழகத்தை உருவாக்கியது.

பல்கலைக் கழகம் தொடங்கப் படுகிற போது பல எதிற்புகள் வந்தாலும் அரனை முறியடித்து வெற்றிகரமாக செயல்பட வைத்தவர்.
பேராசிரியரின் இலக்கிய முகம் பற்றியே எல்லோரும் பெரிதாக பேசுவது மரபு ஆனால் அவரது அரசியல் முகம் புரட்சிகர அரசியல் மயப் பட்டது கம்யூனிச சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்ட பேராசிரியர் எழுதிய அரசியல் கட்டுரைகள் முக்கியம் வாய்ந்தவை அவரது போராட்ட முகத்தை தொழிலாளர் சார்பை வெளிப்படுத்துபவை.சோசலிச கம்யூனிச கட்டுமானமே உலகத்துக்கு விடுதலை தரக் கூடியது என்பதில் அவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தவர்.

நான் கம்யூனிச சித்தாந்தத்தை என் க.பொ த உயர்தர வகுப்பு காலங்களில் அறிந்தாலும் அதற்கான சரியான புரிதலை பேராசிரியரிடமிருந்தே பெற்றுக் கொண்டேன் இன்று வரை அவர் பாச்சிய அறிவொளி அணையா நெருப்பாகவே உள்ளது.

எதையும் கேள்வி கேட்டு முன்னேறு என்பார்.
இன்று பத்திரிகைகள் ஊடகங்கள் டிஜிற்றல் மயமாகி சமூக மயப் பட்டு சாதிக்கா முடியாத் விடயங்களை அவர் தினகரன் ஆசிரியராக இருந்த போது சாதித்து காட்டினார்.அவர் நாடு முழுவதும் நிகழ்த்திய தினகரன் தமிழ் விழாக்கள் இன்றும் பலராலும் விதந்துரைக்கப் படுவதை பத்திரிகை வரலாறு நம் முன் ஆவணமாக உள்ளது எழுத்தை பரவலாக்கிய ஒரு பத்திரிகையாளனாகவும் அவரை நாம் இனங்காண முடியும்.
Image may contain: 1 person, sunglasses and outdoor எனக்கும் அவருக்குமான நேரடி நட்பு ஒரு ஐந்து வருசத்துக்கு உட் பட்டதுதான் ஆனாலும் என் ஆளுமை சார் அறிவின் நினைவொளியில் அவர் என் புலமைத்துவத்துக்கான அடிப்படைகளை ஆழமாக விதைத்தவர்.
அவரது விரிவுரைகளைத் தாண்டி அவருக்கும் எனக்குமான உறவு நீண்ட நேர உரையாடல்கள் அவரது வீட்டு நூலகத்தை நான் சுதந்திரமாக பயன் படுத்த அனுமதித்தமை ஒரு குடும்ப நட்பாக தொடர்ந்தமை அவரது பிள்ளைகள் பவித்திரா,சுமங்களா மனைவி ஆகியோரின் என் மீது மாறாத அன்பு என்பன இனிய நினைவுகளாய் எப்போதும்.


Mansoor A Cader
Mansoor A Cader அவரில் லயித்திருந்த ஒவ்வெரு கணமும் அற்புதமானது. அன்பும் ஆகர்ஷிப்பும் அலாதியானது. அவர் வீட்டில் சாப்பிடும் அளவுக்கு நம்மை நேசித்தார். இறுதியாண்டில் மெய்யியல பேராசிரியருடன் முரண்பட்டபோது சேதாரம் நிகழ்ந்துவிடாமல் பாதுகாத்தார். அவர் நம்மின் ஊட்டிய அறிவார்ந்த விளக்கஙகள் நன்றிக்கடனுக்குரிவை.

ஒருமுறை துவிசக்கர வண்டியில் வளாகம் வந்தபோது மகள் துவிச்சக்கர வண்டி இது. இன்று அவ காரில் போகிறா எனக்கூறி ஒரு சுவாரஷ்யமான சம்பவத்தையும் கூறினார். அவரின் ஆன்மா சாந்தி பெறுக.
Pena Manoharan
Pena Manoharan 2015 இல் பேரா.பா.ஆனந்தகுமாருடன் யாழ் ப.க. சென்றிருந்தபோது கைலாசபதி அரங்கம் முன்பாக அனுபூதி நிலையில் நின்ற கணங்கள் நினைவில்.வாசிப்பினால் மட்டுமே அறிவேன்.ஆனாலும் ஆசான் தான்.
Murugesu Natkunathayalan
Murugesu Natkunathayalan அவரோடு பழகிய நாட்கள் என் வாழ்வில் அற்புதமானவை.
Varathar Rajan Perumal
Varathar Rajan Perumal மாணவர்களுடன் ஆசிரியர்கள் எப்படி நல்ல நண்பர்களாகவும் இருப்பதற்கான பண்பாட்டுக்கு பேராசிரியரே உதாரணம்
Vijayaretthna Edwin
Vijayaretthna Edwin அவரிடம் பல்கலைக்கழக முதலாம் ஆண்டில் தமிழ் கற்றேன். பெரும் ஆளுமை எனினும் சுவாரஸ்யமாக விரிவுரையை கொண்டு செல்வார்...

பின்னால் கூட்டங்களிலும் நூல்களிலும் அவரது கருத்துக்களை அறிய முடிந்தது...


அவருடைய முக்கியமான கட்டுரைகள் இப்போது வெளிவரவேண்டியவை...

ஆனால் அவர் முன்வைக்கத் தொடங்கிய மாக்சிய அழகியல் பற்றி பின்னர் யாரும் கவனம் செலுத்தவில்லை...

அவர் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கடும் விமர்சனங்களிற்கான பதில் அதில் உண்டு...
Saba Sabeshan
Saba Sabeshan பேராசிரியர் கைலாசபதி இலங்கையின் தமிழ் இலக்கிய உலகின் ஒரு சகாப்தம்..அவருடைய எழுத்தக்கள்..விமர்சன துறையில் அவர் ஆற்றிய பணி அநேகமான ஏகலைவர்களை உருவாக்கியுள்ளது....மார்க்சிச சித்தாந்தங்களின் நவீன சிற்பி

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி