வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 2 July 2018

உலக புத்தக நாள் சித்திரை 23

உலக புத்தக நாள் சித்திரை 23
நான் அறிந்த முதல் புத்தகம் என் அம்மா திறக்க திறக்க புதிய புதிய விசயங்களை அறிய முதல் கருவும் உருவும் அவர்தான் .வாசிப்பின் மூச்சை அவரிடமிருந்துதான் நான் பெற்றேன் புத்தகத்தின் வாசம் அவர் தந்தது .
என் குழந்தைப் பருவத்தில் வீட்டு வேலைகள் தவிர்ந்த மற்ற நேரமெல்லாம் அம்மா கையில் ஒரு புத்தகம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் எனக்கு புத்தகங்களின் மீதான பிரியம் அவரிடமிருந்து வந்ததுதான்.
அரிவரியில் பால போதினியயை அழைந்து அதனுள் மூழ்கிய அந்த நாட்கள் இன்னமும் அப்படியே என்னுள் புதைந்து கிடக்கும் சந்தோசத்தின் குறியீடாய் அது எப்போதும்.
கொஞ்சம் வகுப்புகள் மாறி மாறி ஒரு ஐந்தாம் வருடம் கற்கிற போது எல்லாவற்றையும் வாசிக்கும் ஆர்வம் அப்போதுதான் அம்மா எட்டாம் வகுப்புவரை படித்த ஆங்கில மொழி மூல புத்தகங்கள் அவற்றை புரட்டித்தான் பார்க்க முடிந்த்ததே தவிர வாசிக்க முடியவில்லை.
ஆறாம் வக்குப்பு படிக்கும் போது நான் தீவிர வாசிப்பாளனாய் மாறியிருந்தேன் அப்பொழுதெல்லாம் தொலைக்காட்சி இல்லை வானொலியும் ஒரு சிலரிடம்தான் இருக்கும் அன்றைய பொழுது போக்கு வீடுகளில் பெரிய எழுத்து மகா பாரதம் படித்தல் எட்டு கட்டு மகா பாரதம் .
எங்கள் சிற்றம்பலம் மாமா வீட்டில் அது முழுமையாக இருந்தது நான் கறுத்த மாமி என்று சொல்லும் செளந்தரம் மாமி அவர்கள் வீட்டில் வாங்க்க் வந்து மாலை நேரங்களில் நான் வாசிக்க அம்மம்மமா உட்பட சுற்றியிருந்து சுவைக்கும் அந்த நாட்கள். இது அன்று எங்கள் ஊரில் பல வீடுகளில் நடந்த கதை கேட்கும் மரபு.
பெரிய எழுத்து மகா பாரதக் கட்டு புத்தகங்கள் அப்போ பலரிடம் இருந்தன எனக்கு அந்த புத்தகங்களில் கீறப்பட்ட படங்களை பார்த்து பார்த்து ரசிப்பது எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது குறிப்பாக யுத்த பர்வ படங்களிலேயே என் நாட்டம் இருந்ததமை குறிப்பிடத் தக்கது.அந்த ஓவியங்கள் தஞ்சாவூர் பாணியயை பின்பற்றி இருந்தமையும் இங்கு மனம் கொள்ளத் தக்கது.
அடுத்த கால கட்டத்தில் சிறிய துப்பறியும் நாவல்கள் வாசிக்கும் வாசகனாய் மாறுகிறேன் பி.டி.சாமி போன்றோரது கைக்குள் அடங்கும் புத்தகங்கள்.மிகவும் விறு விறுப்பான அனுபவம் வாசிக்கும் போது நாமே துப்பறிவாளனாய் மாறும் வாசிப்பில் உள் நுழைவு.
கனகசிங்கம் மாமா சின்ன மாமா மூலம் வாசிப்பாய் உள் வந்து பகுத்தறிவை தந்த பெரியார்,அண்ணா,கலைஞர் நூல்கள் ஆரிய மாயயையும் தூக்கு மேடையும் கனலாய் தெறித்த புதிய திராவிடத் தமிழ்.
அடுத்த ஒரு கட்டத்தில் தமிழகத்து வார மாத சஞ்சிகளில் மூழ்கிப் போனமை அம்புலி மாமா,ஆனந்த விகடன் ,கல்கி குமுதம்,ராணி பேசும் படம் ,பொம்மை என எல்லாவற்றையும் வாசித்தமை இன்றும்தான்.
எங்கள் கிராம சபை நூலகத்துக்கு எழுபதுகளில் மாஸ்கோ முன்னேற்ற பதிப்பக நூல்களும் சோவிதத் நாடு தமிழ் பதிப்பும் கட்டு கட்டாக வரும் லெனினும் மாக்சும் ஏங்கல்சும் என் கண்களுக்கு விருந்தானார்கள் பின்னர் சிந்தைக்கும் .அதே போல இன்றைய சீனா வண்ணப் படங்களுடனும் மா ஓ வின் நூல்களும் கடுமையான மொழி பெயர்ப்புகளாக இருந்தாலும் கருத்தூன்றி வாசித்தேன்.
சரித்திர சமூக நாவல்களில் மயங்கியமை சாண்டில்யனும் ,அகிலனும்,கல்கியும் ,ஜெகசிற்பியனும் ,பார்த்தசாரதியும் மு.வவும் பின்னர் ஜெயகாந்தனும் என் வாசிப்பில் நீண்ட அந்த நாட்கள் .
பல்கலைக்கழகம் நூல்கள் பற்றிய வாசிப்பை மேலும் அகலிக்க வைத்தது ஜெயகாந்ரனும் ,ஜானகி ராமனும் என்னுள் புகுந்த நாட்கள். ஆராய்ச்சி நூல்களில் முகத்தை புதைத்து கிடந்த நாட்களும் அவைதான்.கைலாசபதியும்,சிவத்தம்பியும் வித்தியானந்தனும் என்னுள் குடி கொண்ட நாட்கள் அவை.
கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளராக என் காலம் தொடங்கிய பின் கலை நாடி கலை செய்யும் கலைஞனாய் நாடகம் கலை தொடர்பான நூல்களுக்குள் என்னை புதைத்து தேடலும் திரட்சியுமாய் கனிந்த வாசிப்பு.
சேக்ஸ்பியரும் ,இப்சனும்,மாக்சிம் கார்க்கியும் ,இதன் வழி இன்னும் பல நூறு ஆளுமைகளை அவர்கள் எழுத்துக்களை என்னுள் செரித்த அந்த நாட்களும் என் வீட்டு நூலகமும் நானும்
புத்தகங்களை தேடி மூதூரில் அன்றுள்ள எல்லா நூலகங்களுக்கும் சென்றிருக்கிறேன் சேனையூர் சிறி கணேசா சன சமூக நூல் நிலையம்,கட்டைபறிச்சான் கிராம சபை நூல் நிலையம் ,சம்பூர் கிராமசபை நூல் நிலையம் ,மூதூர் பட்டினசபை நூல் நிலையம் ,மல்லிகைத்தீவு கிராம சபை நூல் நிலையம் திரிகூடத்தில் வ.அ. அவர்களது நூலகம் அதிலிருந்து இலங்கையெங்கிலும் பல இடங்களிலும் நான் பார்த்த பல நூல் நிலையங்கள் இன்று உலக நாடுகளில் உள்ள பல நூலகங்கள் உலக புத்தக நாளில் நம் முகமாய் உள்ளது.
இன்று நானே நூல்களை ஆக்கும் எழுத்தாளனாய்.

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி