வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 2 July 2018

காலம் தோறும் மாறி வரும் கதைசொல்லும் மரபும் கதை சொல்லிகளும்

காலம் தோறும் மாறி வரும் கதைசொல்லும் மரபும்
கதை சொல்லிகளும்

கதைகள் நம் நிலத்தோடும் வாழ்வோடும் பின்னிப் பிணைந்தவை இப்படித்தான் கதைகள் சொல்லப் பட வேண்டும் என்ற எந்த கட்டுப் பாடுகளும் இல்லை .கதை சொல்லிகளும் அப்படித்தான்.
மனித சமூகம் தோன்றியதிலிருந்தே ஆயிரமாயிரம் கதைகள் அவர்களிடம் புதைந்து போன வரலாறு நிறையவே உண்டு.
நம் ஆச்சியும் ஆத்தையும் மூத்தோரும் சொன்ன கதைகள் எத்தனை
நவீன இலக்கிய மோடிமைகள் இன்று கதை சொல்லுதல் பற்றி வரைவிலக்கணங்களை வகுத்துக் கொண்டு அந்த சட்டகத்துக்குள் வராதவர்களை ஒரு விதமாக கிரேக்க காலத்து சற்றயர் நடையில் பந்த நூலும் நச்சாதார்க்கினியாரும் தந்து வழி காட்டிய பிதா மகன் வழியில் எழுதுவதும் அதி மேதாவிகளின் ஆற்றாமையின் குரலே.
உலக இலக்கிய வரலாறு நாவல் எழுதியோர் நாடகம் எழுதியதும் நாடக மொழி சார்ந்தோர் நாவல் எழுதியதும் முரண் நகையல்ல.சேக்ஸ்பியர் நாடகராக எப்படி கொண்டாடப் படுகிறாரோ ஒரு படி மேலாகவே ஆங்கிலேயர்களால் காவியக் கவிஞனாகப் போற்றப் படுகிறார்.
இன்னமும் சாண்டில்யனின் கடல் புறாவும்,கல்கியின் பொன்னியின் செல்வனும்,அகிலனின் சித்திரப் பாவையும் ,ஜெகசிற்பியனின் நந்திவர்மனின் காதலியும் பேசப்படுகிறது.
கதை சொல்லிகளை யாரும் இப்படித்தான் எழுத வேண்டும் என்று கட்டளை இட முடியாது இலக்கிய ஜனநாயகம் மதிக்கப் பட வேண்டும் .
இன்று உலக இலக்கியம் அதன் போக்கு மாறி விட்டது அவுஸ்ரேலிய பழங்குடி மக்களின் கதைகள் பாடல்கள் இலக்கியமாகியுள்ளன.
அவரவர் மொழி நடையொன்று உண்டு அது அவர்களுக்கானது.
ஈழ நவீன தமிழ் இலக்கியம் அது இன்று பன் முகம் கொண்டதாய் ஈழத்திலும் புலம் பெயர் வாழ்விலும் புதிய ஆளுமைகளையும் கதை சொல்லிகளையும் நமக்கு தந்அதுள்ளது.
கவிதை எழுதுவோர் கதை எழுதுவதும்
கதை எழுதுவோர் கவிதை சொல்வதும்
நாடகம் சார்ந்தோர் நாவல் புனைவதும்
நாவல் எழுதியோர் நாடகம் ஆக்குவதும்
வழுவல காலம் தோறும் எல்லாம் மாறும்
கதை சொல்லும் முறையும் மாறும்
நான் பல்கலைக் கழகத்தில் நாவல் சிறுகதை பற்றி படித்த போது அவை பற்றி இருந்த எண்ணக் கருக்கள் நாப்பது வருடங்கள் கடந்த நிலையில் அதன் மதிப்பீடுகள் மாறியுள்ளன .
யாரும் எழுதலாம் எழுத்துக்கு எல்லையில்லை

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி