வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 2 July 2018

எங்கள் மூத்த அண்ணாவி ஆரையூர் மு.க எனப்படும் கலாபூசணம்.மு.கணபதிப் பிள்ளை

இன்று 30.06.2018 சனிக்கிழமை ஆரையம்பதியில் மூத்த கலைஞர் மூனாகானாவுக்கு மதிப்பளிப்பு நிகழ்வு நடை பெறுகிறது வாழும் போதே வாழ்த்தி கொண்டாடுவோம் நம் மண்ணின் மா கலைஞர்களை

எங்கள் மூத்த அண்ணாவி ஆரையூர் மு.க எனப்படும் கலாபூசணம்.மு.கணபதிப் பிள்ளை

அண்ணாவியார்,கவிஞர்,மரபு வழிப்பட்ட ஆராய்ச்சி அறிஞர் என பன்முகத் தன்மை கொண்ட படைப்பாளி.ஆரையம்பதியின் அதன் வரலாற்றையும் கலாசார பண்பாட்டு விழுமியங்களையும் உலகறியச் செய்வதில் பெரும் பங்காற்றி ஆரையம்பதிக்கு பெருமை சேர்த்த முதல் தலை கலை மகன்.
கூத்து மீளுருவாக்கம் என்ற கோட்பாட்டு தளம் அதற்கான உரிமை கோரல் வாதப் பிரதி வாதங்கள் நீண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் கலைஞர் சத்தமின்றி கூத்தில் புதிய மாற்றங்களை இன்றைய கூத்து பிதாமகர்கள் பிறக்காத அறுபதுகளில் கலைஞர் மு.க கூத்துக்களில் அதன் கதை கூறலில் புதிய உள்ளடக்கப் புனைவை சமுகப் பிரச்சினைகளை மையமிட்டு நிகழ்த்திக் காட்டியவர்.அந்த கூத்துக்கள் நவீன கூத்துக்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றன.கூத்து மீளுருவாக்க முன்னோடிகளில் ஒருவர் நம் மு.க.
பல விருதுகள் அவரை தேடி வந்தடைந்தன இலங்கை அரசின் விருது வடக்கு கிழக்கு மாகாண அரச விருது,கிழக்கு மாகாண இலக்கிய விருது என பல விருதுகளைப் பெற்றாலும் கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத் துறை தலைக்கோல் விருது கொடுத்து கிழக்கின் தலை கலை மகனாக மதிப்பளித்தமை இங்கு குறிப்பிடத் தக்கது.
அவருடனான பரீட்சயம் நான் கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளராக கலைப் பீடாதிபதியாக கடமையர்றிய காலங்களில் அவரோடு உரையாட அவர் அனுபவங்களை என்னுள் பகிர்ந்து கொள்ள கிடைத்த அந்த நாட்கள் எனக்கு கிடைத்த ஒரு பேறாகவே கருதுகிறேன்.
மட்டக்களப்பின் பண்பாடு வரலாறு மரபு வழிக் கலைகள் என்பவற்றில் ஒரு முதிர்ந்த அறிஞர் ஆரையம்பதி சமூகம் அவரால் பெருமையுறுகிறது.
கிழக்கு மாகாணம் பற்றிய அறிதலில் ஒரு பல்கலைக் கழகமாக திகழும் மு.க அவர்களுக்கு கிழக்குப் பல்கலைக் கழகம் இலக்கிய கலாநிதி பட்டம் அளித்து தன்னை கெளரவப் படுத்திக் கொள்ள முடியும்.
இந்த மகா கலைஞனை வாழும் போதே வாழ்த்தி மகிழ்வோம்
இவன்
பால.சுகுமார்
மேனாள் முதன்மையர்
கலை கலாசாரப் புலம்
கிழக்குப் பல்கலைக் கழகம்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி