வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 15 June 2020

நடை வழிக் கவிதை

நடை வழிக் கவிதை

வெண் பனி தூவும்
நாட்கள் போய்
வெள்ளைப் பூக்கள்
விரியும் காலம் இது


கொள்ளையிடும் அழகில்
கொரோனா கூட மறந்து போம்
கொல்லென்று சிரிக்கும் பெண்ணாய்
மல்லிகை போல் இங்கு

சில்லென குளிர் காற்று
இங்கு எப்போதும்
நில்லெனச் சொல்லி
நிலை மயக்கும் பூக்கள்

தேன் சுவை நாடும்
வண்டுகள் கூட்டம்
இங்கும் விரவிக் கிடந்து
மதுவுண்டு மயங்கிச் சாகும்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி