வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 15 June 2020

அன்னையர் தினம்

அன்னையர் தினம்

Image may contain: 1 person, close-up and outdoor
உன்னில் இருந்து
உதிர்ந்த முதல் பூ நான்
பொன்னாய் மணியாய்
பவளமாய் இன்னும் பலதாய்
சொல்லிய தாலாட்டில்
மண்ணின் சொர்க்கமாய்
உன் மடி கண்டேன்



Image may contain: 2 people, including Balasingam Sugumar, people standing கன்னத்தில் முத்தம்
கைகளில் அணைப்பு
கிண்ணத்தில் அன்னம்
வண்ணம் வண்ணமாய்
எண்ணி எண்ணி
சுவைக்க இனிக்க
அம்மா உன் நினைப்பு
கற்ற்ல் எழுதல்
காவியச் சுவையில்
கதைகள் சொல்லல்
என எல்லாம்
உன்னில் இருந்து
என்னுள் செரித்த
மந்திர வித்தை
மாய நூல் ஏணி
வானில் இருந்து
வந்து போகும்
அதில் நான் ஏறி
ஆகாசத்தை அளந்து
இறங்கிய
அற்புத கதைகள்
எத்தனை சொன்னாய்


Image may contain: 2 people, including Balasingam Sugumar, people standing and outdoor
ஒவ்வொரு நாளும்
உன் குரல் எனக்கு
உற்சாக பானம்
ஞானப் பால் தந்த
மோனச் செருக்கு நீ
மெளனத்தின் மொழியில்
எவ்வளவு
அர்த்தங்கள் உன்னதமாய்





Image may contain: one or more people and people sitting நீயும் நானுமாய்
நெடுக நெடுக
Image may contain: 3 people, including Balasingam Sugumar, people standing and outdoor

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி