வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 15 June 2020

நடை வழிக் கவிதை

நடை வழிக் கவிதை

கோதுமையின் பூ விரிப்பில்
குதுகலித்துக் குருவியெலாம்
பாய் விரித்துப் படுத்திருக்கு
பரந்த இந்த வயல் வெளியில்


நான் இருந்து ரசித்திடவே
நல்ல தமிழ் எனக்கிருக்கு
முப்பாட்டன் வழியினிலே
மூத்த தமிழ் உடன் இருக்கு

கா விரிந்த சோலையிலே
பூ அவிழ்ந்து மணம் பரப்ப
புன்னகையில் மைனாக்கள்
வாய் திறந்து பாடுமிங்கு

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி