வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 15 June 2020

முள்ளி வாய்க்கால் முடிந்து போன கதை அல்ல

முள்ளி வாய்க்கால் முடிந்து போன கதை அல்ல

வரலாறு முழுவதும்
துயரத்தின் சுமைகளை
சொல்லி விட்டு சென்ற
ஒப்பாரிப் பாடல்

ஈழம் எதிர் கொண்ட
இடர் களையா நாட்கள்
போர் தின்று போன
போராட்ட வாழ்வுதனை

யார் கொண்டு போனார்
தேர் போன்ற வாழ்வெல்லாம்
திசை மாறிப் போன நாட்கள்
பூவென்றும் பிஞ்சென்றும்
பழுத்துதிரா பழமெல்லாம்
வாழ்வின்றிப் போன
வகையறியா நாட்கள்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி