வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Wednesday 7 March 2018

சேனையூரிலிருந்து யாழ்ப்பாண பல்கலைக் கழகம் வரை 1977-2017 நாற்பது வருட நினைவு

சேனையூரிலிருந்து யாழ்ப்பாண பல்கலைக் கழகம் வரை
1977-2017 நாற்பது வருட நினைவு

கொட்டியாரப் பிரதேசத்தில்தமிழ் பாடசாலைகளில் பல்கலைக் கழகத்துக்கான பாதையயை முதன் முதல் திறந்து வைத்த பெருமை எங்கள் சேனையூர் மத்திய கலூரிக்கே உரித்தானது.1977ல் நாங்கள் மூவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு தெரிவாகிறோம்.நான் சுலோஜனா(இன்று திருகோணமலை சண்முகா வித்தியாலய அதிபர்)சிறிஸ்கந்தா(உதவிக் கல்விப் பணிப்பாளர் திருகோணமலை)
ஒரு பிரதேசத்தின் கனவு நனவான தருணம் அது.பல கனவுகளுடனும் அச்சத்துடனும் பல்கலைக் கழகத்துக்குள் நுழைகிறேன் 1974ல் தொடங்கப்பட்ட யாழ்ப்பாண வளாகம் நாங்கள் மூன்றாவது தொகுதி மாணவர்கள்.
யாழ்ப்பாணமே பெரிதாய் தெரியாத எனக்கு திருநெவேலி புலவர் வளவில் தணிகாசலம் மாமா வீட்டில் அடைக்கலம் கிடைக்கிறது அதுவும் ஒருவகையில் பல்கலைக் கழகம்தான்.எல்லா இடத்து மாணவர்களும் அங்கு தங்கியிருந்து படித்தனர்.
Image may contain: outdoor எங்கள் தொகுதி மாணவர்களில் மட்டக்களப்பு திருமலை ,வன்னி,மன்னார் ,யாழ்ப்பாணம் அம்பாறை,என மாணவர்களின் கலப்பு
முதல் நாள் உள் நுழைகிறேன் இடதுசாரி மாணவர் அமைப்பு வரவேற்கிறது எனும் பதாகை முகப்பில் வரவேற்க சில மாணவர்கள் வந்து என்னை அதை ஏறி அவிட்குமாறு பணிக்கின்றனர் நான் தூணில் ஏறுகிறேன் பின்னர் மார்சல் வந்து என்னை இறங்கும் படி சொல்ல ,தொடர்ந்து வரும் நாட்களில் பகிடி வதை பலமாக நடை பெறுகிறது.அப்போது மாணவர் அவை தலைவராக இருந்தவர் நம் கவிஞர் வ.அ.ஐ.ஜெயபாலன்.
வளாகத்தில் சிங்கள மாணவர்களும் கலந்து இருந்தனர் 1977ல் ஏற்பட்ட இனக் கலவரம் ஜேயாரின் வரலாற்றுப் புகழ்மிக்க போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்ற பிரகடனம் சிங்கள மாணவர்கள் வராமல் போயினர் தமிழ் பேசும் மாணவர்களுக்கான வளாகமாக மாறியது.
Image may contain: house and outdoor எங்கள் தொகுதி மாணவர்கள் நினைவில் உள்ளவர்களை இங்கு பதிவிடுகிறேன்
வரதன்(யாழ்ப்பாணம்வரதராஜப் பெருமாள்)செல்வின்(யாழ்ப்பாணம்),ஜோசப்(யாழ்ப்பாணம்),அல்லை சிறி,கிரிஜா(கொழும்பு),நயினை சிறி,ஜெயராஜ்(யாழ்ப்பாணம்),கிருஸ்ணபிள்ளை(ஒமந்தை),அருந்ததி(யாழ்ப்பாணம்),வேலாயுதபிள்ளை(கனகராயன் குளம்),குணசிங்கம்(கனகராயன் குளம்),அருள்வேல்(யாழ்ப்பாணம்),ஜெயராணி,சந்திரமணி(காரை தீவு),சுலோஜனா(கட்டை பறிச்சான்),தாரிணி,வாசுவதா(மன்னார்),புஸ்பராணி(செட்டிகுளம்),மகேஸ்வரி(கரவெட்டி)மகேஸ்வரி (வவுனியா)சியாமளா(மன்னார்),யோகேஸ்வரி,சுவர்ணஜெயந்தி(மட்டக்களப்பு),வசந்தி(மட்டக்களப்பு),ஜெயந்தி(கல்முனை)தருமலிங்கம்(முல்லைத் தீவு),சாந்தி(கல்முனை)சாந்தி (யாழ்ப்பாணம்),சகுந்தலா(கொக்குவில்)குணலட்சுமி(புதுக் குடியிருப்பு),ராஜலட்சுமி(மட்டக்களப்பு),ரூபி வலன்டீனா(மட்டக்களப்பு),மன்சூர் ஏ காதர்(சம்மாந்துறை),கபூர்(அக்கரைப்பற்று),வேதநாதன்,,கமலாம்பிகை(மன்னார்),பாலா(வரணி)கணேசராஜா,சோதிலிங்கம்,சுசிலா(யாழ்ப்பாணம்)மேர்சி,எச்.எம் .பாரூக்(கல்முனை),மகோற்கட மூர்த்தி,புஸ்பரட்டினம்,மேரி(மன்னார்)சாந்திகேசவன்(மட்டக்களப்பு)பேரின்பராஜா(செட்டிபாளையம்),ஆனந்தன்(யாழ்ப்பாணம்),பாலேந்திரன்,சிவலோஜனா(தெல்லிப்பளை)ராணி (வங்காலை)கங்கேஸ்வரன் (திருகோணமலை)கனகசுந்தரம்(தோப்பூர்)திருச்செல்வகுமாரி(வவுனியா)குலசிங்கம்(தம்பலகாமம்)
நித்தியானந்தன் (ஊறணி ) பாக்கியநாதன் (மலையகம்,) அக்னேஸ் (மன்னார்,) நிரஞ்சினி (யாழ்,) போல்றாச் (மன்னார்), ஜெயசக்தியா( யாழ்,) அம்பிகா (யாழ், )அருள்நேசன்( யாழ்,) குகேசுவராசா, அருள்ராசா, றமணி, தெய்வேந்திரம்பிள்ளை, றெவல்(மன்னார்)மரியான் குஞ்சே(,மன்னார்)
தொடரும்...
நண்பர்களே தவற விட்டவர்களை தொடருங்கள்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி