வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Tuesday 20 March 2018

பேரறிஞர் அண்ணா திராவிடத்தின் குரலாய்

பேரறிஞர் அண்ணா
திராவிடத்தின் குரலாய்




பேரறிஞர் அண்ணா என் பள்ளிப் பருவ வாசிப்புக்கும் நேசிப்புக்கும் உரிய சிந்தனையாளராக இருந்தவர் என் அம்மாவின் மாமா திரு .ஆ.கனகசின்கம் கல்லம்பாரில் அண்ணாவியாராக இருந்தவர் திரு ஆறுமுகம் அவர்களின் மகன் அம்மா சின்ன மாமா என்று அழைப்பார் நானும் சின்ன மாமா என்றே அழைக்கத் தொடங்கினேன் இன்று வரை அப்படித்தான் அழைத்து மகிழ்கிறேன் அவர் ஒரு தீவிர வாசிப்பாளன்.
அன்றய நாட்களில் திராவிடக் கொள்கைகளிலும் அண்ணாவிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.அவரிடம் அண்ணாவின் புத்தகங்கள் குவிந்து கிடக்கும் அங்குதான் அண்ணா எனக்கு அறிமுகமானார்.
அந்த நாட்களில் துப்பறியும் நாவல்கள் சின்ன கையடக்கமான பதிப்புகள்ளாக வெளி வந்தன அதே போலவே கையடக்க பதிப்புகளாக அண்ணாவின் நூல்கள் விரைவான வாசிப்புக்கு ஏற்றவையாக நம்மை கவரும் அடுக்கு மொழியில் அமைந்தமை சாதாரண மக்களிடம் தீவிர எழுத்தை கொண்டு சேர்த்தது.
பின்னாட்களிலும் அண்ணாவை தேடி வாசிக்க அவரின் எழுத்து என்னை கவர்ந்தது ரஸ்யப் புரட்சியின் பின் சோசலிசக் கட்டுமானக் கருத்துக்கள் இத்தைய சிறிய வெளியீடுகள் மூலமே மக்கள் மத்தியில் கொண்டு செல்லப் பட்டது அந்த வழியயையே அண்ணா பின் பற்றி இருந்தார்.
திராவிடம் தமிழ் பற்று மாநில சுயாட்சி பகுத்தறிவு அண்ணாவின் எழுத்துக்களின் பேசு பொருளாய் இருந்தவை அறுபதுகளில் ஈழத்து இளைஞர்கள் அண்ணாவில் எழுத்துக்களால் கவரப் பட்டனர் என்பதும் அவரைப் போலவே எழுத முற்பட்டவர்களும் மேடைப் பேச்சுக்களை பேசியவர்களும் ஈழத் தமிழர் மத்தியில் உருவாகினர் அண்ணா என்றால் அடுக்கு மொழி என்ற தமிழின் தனித்துவம் பேசப் பட்டது.
அண்ணவின்
கம்பரசம்
தீ பரவட்டும்
ஆரிய மாயை
சிவாஜி கண்ட இந்த் ராச்சியம்
என்னைக் கவர்ந்தவை
பேரறிஞர் அண்ணாவின் நூல்கள்

ரோமாபுரி ராணி (நூல்)
கம்பரசம் (நூல்)
குமரிக்கோட்டம் (நூல்)
விடுதலைப்போர் (நூல்)
கற்பனைச்சித்திரம் (நூல்)
சிறுகதை (நூல்)
ஆரியமாயை (நூல்)
உலகப்பெரியார் (நூல்)
ஜமீன் இனாம் ஒழி்ப்பு (நூல்)
பணத்தோட்டம் (நூல்)
தீ பரவட்டும் (நூல்)
1858-1948 (நூல்)
அறப்போர் (நூல்)
இலட்சிய வரலாறு (நூல்)
வர்ணாஸ்ரமம் (நூல்)
ரேடியோவில் அண்ணா (நூல்)
நிலையும் நினைப்பும் (நூல்)
தாழ்ந்த தமிழகம் (நூல்)
மே தினம் (நூல்)
Image may contain: 2 people, people smiling, people eating and indoor அவரது வானொலிப் பேச்சுகள் மேடைப் பேச்சுகள் ,நாடகங்கள் திரைப் படங்கள் நூல்களாக தொகுக்கப் பட்டுள்ளன நம் இளைய சந்ததி அறிய வேண்டிய எழுத்துகள் அண்ணாவினுடையது.
நம் காலத்தின் மொழி அண்ணா

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி