வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday 11 March 2018

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நான் தயாரித்த நாடகங்களும் அரங்க ஆற்றுகைகளும்

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நான் தயாரித்த நாடகங்களும் அரங்க ஆற்றுகைகளும்

என் ஒன்பதாவது வயதில் மேடையேறிய நான் கடந்த 52வருடங்களில் ஆயிரம் மேடைகளை தாண்டியிருபேன்.ஈழத்தில் தொடங்கி உலகப் பரப்பெங்கும் விரிந்து செல்லும் என் அரங்க அனுபவங்கள்.
எங்கள் கூத்து களரி முதல் உலகின் உச்சமான ஒபேரா அரங்குகள் வரை எத்தனை வகையான அரங்குகள் சேக்ஸ்பியரின் குளோப் தியட்டரையும் ரோமானிய கொலோரியத்தையும் கண்டு களித்த தருணங்கள்.கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக லண்டனில் ஒரே அரங்கில் மண்டம் நிறைந்த காட்சிகாளாய் ஆற்றுகை செய்யப் படும் லயன் கிக் நாடகத்தை பார்த்து பிரமித்தாலும் வசதியிருந்தால் நம் கூத்தையும் இதே போல ஆற்றுகை செய்யலாம் என ஆதங்கப் பட்ட பொழுதுகள்.நம் அரங்கின் விகர்சிப்பை எண்ணி மகிழ்ந்த நேரமது.
1992 முதல் 2006 வரை நான் கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரயாளராக இருந்த காலங்களில் நான் நெறிப் படுத்திய நாடகங்கள் பல அவற்றில் நடித்த பலர் இன்று புகழ்பெற்ற கலைஞர்களாய் உலகம் முழுவதும் பயணிக்கிறார்கள்.அவர்கள் பற்றி பின்னர் தனித்தனியே எழுதுகிறேன்.
1)புழுவாய்ப் பிறக்கினும்
2)பாரதி பிடித்த தேர்வடம்
3)கருஞ்சுழி
4)செம்பவளக் காளி
5)ஆற்றைக் கடத்தல்
6)கொங்கைத் தீ
7)குறிஞ்சிப் பாட்டு
8)அநீதிகள்
துணை நெறியாளராகவும் நடிகனாகவும் தொழிற்பட்ட நாடகங்கள்
1)புதியதொரு வீடு
2)இராவணேசன்
1)கண்ணகி குளிர்த்தி
2)கிழக்கிசை
3)லயம்
ஆகியவற்றின் இணை தயாரிப்பாளராகவும் நெறியாளராகவும் செயல் பட்டமை அரங்கனுபவங்களின் தொடர் நீட்சி.
இன்னியத்தின் இணை வடிவமைப்பாளர்
என் நாடகங்கள் எதுவுமே ஒன்றைப் போல் ஒன்றிருந்ததில்லை அல்லது ஒரே வாய்ப்பாட்டு முறையிலும் அமைந்தவையல்ல கற்பனைகளின் வழி பயணிப்பவன் கலைஞன்.
அரங்க வெளி ஒற்றைப் பரிமாணம் கொண்டதல்ல அது பன்மைத்துவம் மிக்கது.கிரேக்கத்து தெஸ்பிஸ் முதல் நம் செல்லையா அண்ணாவியார் வரை பல்லாயிரம் கலைஞர்கள் பயணித்த பாதையிது.
அந்த பால் வெளியில் நானும் ஒரு சிறு புல்லாய்.
ஒன்றை வெறுத்து வெட்டி ஓடும் தந்திரோபாய விளையாட்டல்ல அரங்கவியல் நம் முந்தய முன்னோடிகளின் வழித்தடத்திலும் நம் கண்டுபிடிப்புகளின் பாச்சலிலும் நமக்கான பாதையயை தெரிந்து கொண்டு அதன் வழி பயணிப்பது .
பரதமுனியும் ,மீலாங்பாங்கும்,பிரக்டும்,ராமானுஜமும்,கண்ணப்ப தம்பிரானும்,வித்தியானந்தனும்,ஆனைக்குட்டி அண்ணாவியும்,குரட்டோவஸ்கியும்,அகஸ்தாபோலும்,பாதல்சர்காரும்,கே.ஏ.குணசேகரனும்,மேயர்கோல்டும்,ஸ்ரனிஸ்லாஸ்கியும் நமக்கு ஒன்றுதான்.இவர்களிலிருந்துதான் நாம்.
தமிழில் நாடகமில்லை என இன்னமும் ஒரு சாரார் சொல்லிவருகின்ற சூழ் நிலையில் தமிழ் மரபின் நாடக எழுத்துருக்களுக்கான வகை மாதிரிகளாக என் நாடகங்கள் அமைந்தன.
புழுவாய்ப் பிறக்கினும் உடல் மொழியயயையும் கணேசன் எனும் நவீன நாடகமொழியாளனின் கதையாடல் அது எக்காலத்திலும் மனித சமூகம் சந்திக்கின்ற பிரச்சினைகளை உள்ளுறை உவமாக சுட்டிக் காட்டிய சொல் மொழி.

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி