வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Tuesday 20 March 2018

ஒரு உப கத இசுக்கா கூழையன்

ஒரு உப கத
இசுக்கா கூழையன்

ஒரு ஊர்ல ஒரு இசுக்கா கூழையன் இருந்தானாம் அவனுக்கு பலகாரம் சாப்பிட சரியான ஆசையாம் எங்கடா பல்காரம் கிடைக்கும் என்று அலைஞ்சானாம் பலகாரம் சுடுற ஆக்கள தேடிப் போனானாம்.
ஒரு இடத்தில பலகாரம் சுடுவதா கேள்விப்பட்டு அந்த இடத்தில யாரையும் காணல்லையாம் ஆனா ஒரு ஆள் நல்ல வாட்ட சாட்டமா வண்டியும் தொந்தியுமா ஒருவன் நிண்டானாம் .
அவனிட்ட இவன் போய்..
ஐயா இங்க ஆறு பலகாரம் சுடுறவங்க என்று கேட்டானாம்
அதுக்கு அந்த தொந்தியன்
என்னப் பாத்தா பலகாரம் சுடுறவன் மாதிரி தெரியல்லையா என்று அதட்டி விட்டானாம்
இல்ல ஐயா எனக்கு பலகாரம் சாப்பிட சரியான ஆச அதுதான்...என்றிழுத்து தலய சொறிஞ்சானாம்.
பலகாரம் சுடலாம் ஆனா மாவும் எண்ணையும் வாங்கி வா
என்று சொன்னானாம் தொந்தியன்
இவனும் ஓடிப்போய் வாங்கி வந்து குடுத்தானாம்
சரி நான் உள்ள போறன் நீ வெளியில நி சலீர் என்றொரு சத்தம் கேக்கும் அப்ப ஓடி வா இவனும் நிக்கிறானாம் சத்தம் கேக்கலையாம் கன நேரத்துக்கு பிறகு சத்தம் கேட்டிச்சாம்
ஒடி வா உன்ர சால்வய புடி என்று பலகாரம் சுட்டு முடிஞ்சு கடைசிய வளிச்சு தாச்சியில ஊத்தினா கருகலா அடிப் பலகாரம் தூள் அது
அது பலகாரம் தீஞ்சு போச்சு அடுத்த முற வா நல்ல பலகாரம் சுட்டு தாறன் என்றானாம் அவன்
இப்படி பலமுற நடந்து போச்சுதாம்.
ஆனா இன்னமும் நம்பிற்று இருக்கானாம் அந்த இசுக்கா கூழையன்
வாசல்ல சால்வத் துண்டோட.
பலகாரத்துக்காக காத்திருக்கும் .....
LikeShow More Reactions
Comment

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி