வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday 4 March 2018

இதயம் கவரும் ஈச்சிலம் பற்று

இதயம் கவரும் ஈச்சிலம் பற்று


செண்பக நாச்சியின்
திருக்கண் பார்வையால்
ஈச்சிளம் பற்றாய்
இனம் கண்ட பூமி

பச்சை வயல்களும்
பசும் புல் வெளிகளும்
பால் தரும் பண்ணைகள்
நிறை நிலம் இதுவே
கல் மலையெங்கும்
கல்வெட்டின் சாட்சி
புராதனத் தமிழாய்
பொலிவுறும் காட்சி
பாலையும் வீரையும்
பழுத்துக் குலுங்கும்
சோலையாய் விரியும்
தொல் தமிழ் ஊர் இது
கவினுறு மாவலி
காடெறி வெள்ளமாய்-இந்த
ஊரேறி வந்து
உவப்பை கொட்டும்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி