வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 17 March 2018

அசலும் நகலும்

அசலும் நகலும்

அசல் என்பது
மாயயைதான் இன்று
இரண்டுமே நகல்தான்
ஒன்றிலிருந்து இனொன்றாய்
உருவாகும் பிம்பம்

பூக்களின் அர்ச்சனை
அசலுக்கா நகலுக்கா
மாலையும் மரியாதையும்
மண்ணில் வீழ்தலும்
தொடர்தலும் மனித
அவலத்தின் குறியீடுகள்தான்
கண்ணம்மா
கொச்சைப் படுத்தப் படுகிறாள்
சுய மரியாதையுள்ள
நம் சுதந்திரக் கவி
பாரதி கண்ட பெண் அவள்
சுயமரியாதையயை
விலை கூறி விற்ற
ஒருவருக்காய்
கண்ணம்மாவின் கண்களில்
இரத்த்தம் கசிகிறது
நம் கவி
பாரதியயை தேடி

10.12.2016

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி