வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 15 June 2020

நிலம் மீண்டவனின் கதை

நிலம் மீண்டவனின் கதை

நேற்று எனக்கொரு
வளவு இருந்தது
அம்மாவும் அப்புச்சியும்
அவர் பிளைகள் நாங்களும்


காற்றுக்கு இருக்கும்
சுதந்திரம் போல
அந்த நிலத்தில்
எல்லாம் எங்களுக்காய்

ஆற்றில் இறங்கி
அனைத்தும் முகர்ந்து
சேற்றில் கூட
செழிப்புக் கண்டோம்

குன்றுகள் தோறும்
குதுகலம் கொண்டோம்
உடையும் குன்றுகள்
உயிரற்றுப் போயின

ஊர் எரிந்து
ஒன்றுமில்லாமல் போனது
வாரிச் சுருட்டி
கொள்ளையிடப் பட்டது

காத்திருந்து
மீண்டும் வந்தோம்
நிலம் பிழந்து
வளங்கள் கொண்டோம்

களமும் வயலும்
கனத்த உழைப்பில்
உயிர் பெற்று
ஊரை நிறைத்தது

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி