வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Friday 12 June 2020

நீ நதியின் மரணத்தை கொண்டாடுகிறாய்

நீ நதியின் மரணத்தை
கொண்டாடுகிறாய்
நான் நதியை அதன் அழகை காதலிக்கிறேன்
நதியை அதன் இயல்பான
போக்கில் போக விடு

இடுக்குகள் வழியே
திசை திருப்பி
அதன் உயிர்த்துவத்தை
கொன்று விடாதே
அதுக்கென்று ஒரு
மொழி இருக்க்கு
அப்படியே பேசட்டும் அது

கவிதையும் அப்படியே
அதை அதன் போக்கில்
விட்டு விடு
வலிந்து சொற்களைச் சேர்த்து
கூடு கட்டி
கொன்று விடாதே

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி