வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 13 June 2020

காதல் எப்போதும் அற்புதம் நிறைந்தது

காதல்
எப்போதும்
அற்புதம் நிறைந்தது
அது அன்பில் கரையும்
ஆசையில் புரளும்
காமுறும்
கலவி கொள்ளும்
ஏமாறும்
இயலாமையில் தவிக்கும்
எவ் வழி செல்லினும்
அவ் வழி எல்லாம்
அன்பைச் சொல்லும்
சொல்லும் காதலில்
சொர்க்கம் காணும்
காணும் தோறும்
காதல் பெரிது
இசையில் கவிதையில்
காவியத்தில்
வாழ்தலில் எல்லாம் காதல்
"ஆதலினால் காதல் செய்வீர்'
என்றான் பாரதி

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி