வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Monday 12 March 2018

இராவணேசன்

இராவணேசன்
கூத்து மீளுருவாக்கத்தின் முதல் பிரதி.பேரா.வித்தியானந்தன் காலத்திலிருந்து இன்றுவரை தொடரும் கலை வரலாறு.செல்லையா அண்ணவியார் மீளுருவாக்கத்தில் இணைந்த மிகப் பெரும் ஆளுமை.பேராசிரியர்.சி.மெளனகுரு கூத்து மீளுருவாக்கத்தின் வரலாறு.
வரலாற்றை மறுதலித்து பலர் இன்று புதிய வரலாற்றை உருவாக்க முற்படுகின்றனர்.தாங்களுக்கு தாங்களே ஒளிவட்டங்களை உருவாக்கிக் கொள்கின்றனர்.
கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத் துறை அதன் ஆரம்ப 1991காலத்திலிருந்து மரபுக் கலைகளின் மீளுருவாக்கத்தில் அக்கறையுடன் தன் செயல் பாடுகளைவிரிவாக்கிக் கொண்டது.
1993ல் மாணவர்களை கன்னங்குடாவுக்கு அழைத்து சென்றமையும் அதன் தொடர்ச்சியாக பாலகப் போடி அண்ணாவியார்,நல்லதம்பி அண்ணவியார் அகியோரை பல்கலைக்கழகம் அழைத்து மாணவர்களை செயல் வழிக் கல்வியில் பங்கு கொள் செயல் பாடுகளில் ஈடுப்ட்டமையும் மறக்க முடியாத நாட்கள்.
கண்ணகி குளிர்த்தியின் மீளுருவாக்கம் மிகப் பெரும் சாதனை அதனை தொடர்து வருகின்ற கிழக்கிசை,ஈழத்தமிழர்களின் தனித்துவமான இசை நடன முறைமைகளை வெளிப்படுத்திய ''லயம் ''நிகழ்ச்சி
ஆனைக்குட்டி அண்ணவியாரை பல்கலைக்கழகத்துக்கு அழைத்து மாணவர்களுடனான கலந்துரயாடல்கள் .அவர் வீட்டுக்கு மாணவர்களுடனான பயணம்.
செல்லையா அண்ணாவியாருடனான மாணவர் சந்திப்புகள்.பல்கலைக் கழகத்த்னுள் பறை மேளக் கூத்தின் அறிமுகம் மாணவர்களும் விரிவுரையாளர்களும் பறை வாத்தியதில் பயிற்சி பெற்றமை
நிரந்தரமான கூத்து களரியயை பல்கலைக்கழக வளவினுள் அமத்து புதிய பன்பாட்டுக்கு அடித் தளமிட்டமை.
இன்னிய அணியின் உருவாக்கம்
1995 தொடக்கம் 2005ம் ஆண்டுவரை தொடர்ச்சியாக நடைபெற்ற உலக நாடக தின விழாக்கள் அவற்றில் மரபுக் கலைகளின் மீளுருவாக்க செயல் பாடுகள்
2000மாவது ஆண்டில் இராவணேசனின் மீள் தயாரிப்பு ,இன்று மீளுருவாக்கம் பற்றி பேசுகின்ற பலரும் கூத்து பயிற்சி பெற்ற களம் இதுவே.
பேராசிரியர் மெளனகுரு தலைமையில் எத்தனை சாதனைகள்.
இவை ஒவ்வொன்றும் தனித்தனியே விரிவாக எழுதப் பட வேண்டியவைகள்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி