வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 3 March 2018

அதிகாலையும் அந்தி மாலையும்

அதிகாலையும்
அந்தி மாலையும்
பனிபெய்யும் காலை
வெள்ளை
நில பாவாடையுடன்



பூமித்தாய் பொங்கி
சிரிக்கும் பூ விரியும்
சாலை
பனி கொட்டி
அந்தி மாலையயை
அழகாக்கி
மின்னும் வெளிச்சம்
சில்லிட வைக்கும்
குளிரில்
குது கலிக்கும்
வெண்ணிற வீதிகள்
இயற்கை
அதன் அதிசய
மலர்களை
கொட்டி தீர்க்கிறது
பனி இரவிது
நுனிப் புல்
எங்கும்
கனியாய்
பனித் துளி
காலையும் நீயே
மாலையும் நீயே
பனி மழையாய்
தனியழகாய்
காயும் இந்த
நனி உலகு

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி