வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Wednesday 7 March 2018

சேனையூர் மத்திய கல்லூரி


சேனையூர் மத்திய கல்லூரி
நம்மை செதுக்கி
செப்பனிட்டு
சிலையாக்கி
உயிர் தந்து
ஊணர்வூட்டி
வருங்காலம்,
தன்னை
வடிவமைக்க
வழி காட்டிய
கல்லூரியின்
வரலாறு
அறுபதாண்டுகளை
கடந்து
கால் பதித்து
நாலா திசையும்
கல்வி மறுமலர்ச்சிக்கு
கால் கோளிட்ட
எங்கள் கலைக் கூடம்
முன்னாள் மாணவர் நாம்
முன்னெடுப்போம்
விழாவொன்றெடுத்து
ஆசான்களை கெளரவித்து
அனைத்துலகும்
அறிய வைப்போம்
நம்வரலாற்றை
நாமே எழுதுவோம்
அவர் செய்வார்
இவர் செய்வார்
என்பதெல்லாம்
இல்லாமல்
நாம் செய்வோம்
சிறப்பிப்போம்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி