வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday 4 March 2018

காதல் எனும் பெரு மழை

காதல் எனும் பெரு மழை
மழை பெய்யும் போதெல்லாம்
இனம் புரியாத இன்பம்
தலைக்கேறும்
காதல் தலைக்கேறும் போதெல்லாம்
பெருமழையாய் பிரவாகம்
எடுக்கும்

எல்லோருக்கும்
காதல் வரும்
வரையறைகள் தாண்டி
வானமே எல்லையாக
காதல்
வாழ்வில்
மகிழ்ச்சிக்கான திறவுகோல்
சந்தோசப் பூக்கள் பூக்கும்
மலைகள் தாண்டி
பூப்பறிக்க சொல்லும்
மண்ணை கிண்டி
முத்தெடுக்க வைக்கும்
விண்ணில் பறக்க வைக்கும்
வண்ணாத்திப் பூச்சியின்
சிறகடிப்பில்
காதலின் சொற்கள்
கவிதையாகும்
மழையில் நனைந்து
கை கோர்த்து களிப்பில்
மிதக்க வைக்கும்
காதலின் சுவை
சுவைக்க சுவைக்க
போதை தரும்
காதலே காமமாய்
காமமே காதலாய்
மாறும் என்பது
உலக நியதி
உயிரில் கலந்து
உணர்வில் ஊறி
உயிர்த்தெழுவது
காதல்
நிலவில் பேசும்
கனவில் கலந்திடும்
மனதில் உறைந்திடும்
மாயா ஜாலம் காதல்
அவள் கண்ணில்
அவள் சொல்லில்
அவள் செயல்களில்
அர்த்தம் புரியாமல்
சுற்ற வைக்கும்
சூத்திரச் சொல் அது
காதலே வா
இந்த ஊழி முடியும்வரை
என்னோடு இரு
ஆதலால் காதல் செய்வோம்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி