வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Tuesday 20 March 2018

நதிக் கரை காதல்

நதிக் கரை காதல்


கங்கை கரையில் காத்திருந்தேன்
கண்மணி உன்னை பாத்திருந்தேன்
பொன்னிற ஓளியில் சூரியப் பனியில்
உன்னெளில் கண்டேன் என்னவளே


நாணல் திரையாய் மறைத்திருக்க
நளின உன் முகம் விழி திறக்க
கானக் குயில்கள் பாட்டிசை போல்
காற்றில் வந்தது உன் குரலே

மாவலி ஓடி நடை பயிலும்-அந்த
மண்ணிடை உன் கால் சிலிர்த்து நிக்கும்
தேனிசை மொழியயை பொழிபவளே-என்
சிந்தையயை நாளும் கொல்பவளே

No automatic alt text available.
மதுர நீளல் மணல் பரப்பில்
மன்னவள் உன்னில் களித்திருப்பேன்
முதிர் கனி பழுத்த சுவை போல
முத்தம் என்னில் தித்திக்குதே

ஆற்றிடை ஓடும் சில்லிடைக் காற்று
நேற்றொரு சேதி சொன்னது எனக்கு
பார்த்திருந்தேனே பாவை உன் அழகை
நோற்றிருந்தேனே நுன் முகம் காண


No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி