வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday 11 March 2018

மனம் பூக்கும் மல்லிகைத் தீவு

மனம் பூக்கும் மல்லிகைத் தீவு


மனமெங்கும் பூப் பூக்கும்
மல்லிகைத் தீவு
இனமான வீரர்களின்
இன்பப் பூ ஊர்

குளக்கோட்டன் கல்வெட்டில்
சொல்லி வைத்த சூத்திரங்கள்
வரலாற்று வளமைகள்
வழி வழியாய் ஆட்சி பெறும்
சுற்றிவர வயல்கள்
சூழ்ந்திருக்கும் நெற்காடு
தாமரையும் அல்லியும்
தளிர்ந்திருக்கும் பூக்காடு
பட்டுத் தெறித்திடும் பவளமல்லியும்
விட்டு விரிந்திடும் வெண் முல்லையும்
இந்த மண்ணின்
எழில் சொல்லி பூத்திருக்கும்
மும்முடி சோழ மண்டலத்து
வளநாட்டின் வரலாறாய்
திருமங்களேஸ்வரமாய்
சிறப்புப் பெறும் திருவூர்
தயிரோடு சோறிவர்க்கு
தணியாத விருந்தோம்பல்
எப்போது சென்றாலும்
இன்முகத்து பொன் தூவல்
கண் நீளும் இடமெல்லாம்
எல்லையில்லா நீர்க் கோலம்
வரைவிலா அழகாலே
தான் பொய்யா ஊர் கோலம்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி