வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 3 March 2018

மயிலு

மயிலு
மயிலாய் மனம் கவர்ந்து
செந்தூரப் பூவாய்
வாசம் தந்து
நீலவான ஓடையாய்
நெஞ்சம் தொட்ட
செவ்வந்திப் பூ நீ

முருகாய் அழகாய்
சின்ன வாய் திறந்து
செந்தமிழ் சொல்லி
சிகரம் தொட்ட
பொன்னழகுப் பெண் நீ
மூன்றாம் பிறையாய்
கண்களில் கவிதை
சொல்லி
மந்திரப் புன்னகையால்
மயக்கம் தந்த
இந்திரச் சொல் நீ
இங்கிலிஸ் விங்கிலிஸ்
உலகம் முழுவதும்
உன் பெயர் சொல்ல
மம்மி என எம் முன்
வந்து விழுந்த
எரி நட்சத்திரம் நீ

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி