வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday 11 March 2018

தமிழர்க்கொரு நாள்-அது தமிழர் திரு நாள்

தமிழர்க்கொரு நாள்-அது
தமிழர் திரு நாள்


தரணியெங்கும்
போற்றும் ஒரு நாள்

பொங்கலிடுவோம்
புத்தாண்டாய் மகிழ்வோம்
உழவர் திரு நாள்-இது
ஒன்றே பெரு நாள்
தமிழன் தொன்மை-நம்
முன்னோர் வழியே
பல்லாயிரமாம்
ஆண்டுகள் கடந்து
முந்தை மொழி
எந்தன் மொழி
தந்தை மொழியாமே
செந்தேன் என
செவியில் விழும்
தமிழின் சுவையாமே
சங்கத் தமிழ்
தங்கத் தமிழ்
சிலம்பாய் அது ஒலிக்கும்
தேவாரமும் பாசுரமும்
அமுதாய் இது இனிக்கும்
இளங்கோ முதல்
கம்பன் வழி
காவியங்கள் சிறக்கும்
குறவஞ்சியும் பிரபந்தமும்
கொண்ட தமிழ் பெருக்கம்
விபுலானந்தர் தந்த
யாழ் நூலின் மயக்கம்
பாரதி கண்ட
கனவுகள் நமக்கும்
புதுமைப்பித்தனின்
புனைவுகள் நவீனம்
பாரதிதாசன் பாக்கள்
நமக்குள்
கல்கி தந்த காலத் தமிழ்
அண்ணா கண்ட அடுக்கு தமிழ்
கலைஞர் சொன்ன கவிதைத் தமிழ்
எல்லாம் சேர்ந்ததே இன்றைய தமிழ்
ஈழத் தமிழ்
அது
இன்பத் தமிழ்
என்றும்
சுவையூட்டும்

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி