வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Wednesday 7 March 2018

'விசுவாசபூர்வம் மன்சூர் ''மலையாளத் திரைப்படம்

''விசுவாசபூர்வம் மன்சூர் ''மலையாளத் திரைப்படம்

கதை முக்கிய பாத்திரம் மன்சூர் மற்றும் அவரது தாயார் பார்த்திபி எதிர்பாராத விருந்தினர்களாய் வரும் மும்தாஜ் ,சயிர பானுவை சுற்றிச் செல்கிறது. மன்சூர் அவன் நட்பு,அரசியல் மற்றும் காதல் வாழ்க்கை அனைத்தும் இந்த திரைப்படத்தின் அரசியலாய் நீள்கிறது.
இயக்குனர் பி.டி.குஞ்சிமுகமட் புதிய அனுபவக்களை கதைசொல்லும் முறைமையில் வெளிப்படுத்துகிறார் மிகவும் நன்றாக அனுபவம் வாய்ந்த மற்றும் ஆச்சரியமான . கதையின் கதைகளின் இணைப்பு , மற்றும் அவரது சொந்த கற்பனை அவரது மொழியில் வாழ்வை பிரதி செய்திருக்கிறார். ஆச்சரியங்களையும் அற்புதங்களையும் ஒரு நல்ல நெறியாளன் திரை மொழியில் நிகழ்த்துவான் என்பதற்கு ''விஸ்வாசபூர்வம் மன்சூர்,, நிருபிக்கிறது. .
விருது பெற்ற ஒளிப்பதிவாளர் எம்.ஜே.ரதகிருஷ்ணன் லென்ஸின் பின்னால் என்ன ஆச்சரியமான வேலை செய்கிறார்.என்பதைக் காட்டுகிறது. ஒளிப்பதிவாளர்கள் திரையில் மாயாஜாலம் காட்டுவார்கள் நிறங்களின் துணை கொண்டு விருந்து படைப்பார்கள்
பண்டிட் ரமேஷ் நாராயணன் இசை வார்த்தைகளற்ற காதலை வடித்து தருகிறது பாடல்கள் உண்மையில் படத்தின் முழு உணர்வையும் பிரதிபலித்து நிற்கின்றன.யேசுதாசின் அந்த ஒரு பாடல் இன்னமும் என் காதுகளில்.
காட்சிகளின் ஓட்டம் மிகவும் அமைதியாகவும் அழகாகவும் இருக்கிறது தெளிந்த நீரோடயாக செல்லும் கதை பாய்ச்சலாய் நிகழும் வன்முறை அதன் அடுத்ததாய் நிகழும் அடைக்கலம் அதனால் அனுபவிக்கும் சிக்கல்கள் நம்பிக்கை சிதறாத வாழ்வு பற்றிய நோக்கு திரப்படம் நம் உள்ளே வாழ்கிறது. தொழில் நுட்பமும் உயிர்ப்புமாய் சுற்றியிருக்க்கிறது கதை.
மிகச்சிறந்த சிறப்பம்சமாக ஆஷா சரத், ஜரேனா வஹாப், ரென்ஜி பணிக்கர் நன்கு அனுபவம் வாய்ந்த மிகவும் திறமையான நடிகர்கள் பாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள் ரொசான் மத்தியுவும்,பிரயகா மாட்டின் இருவரும் படம் முழுவதும் ஒரு வியக்கத்தக்க அற்புதமான காதலை சொல்லியிருக்கின்றனர் படம் பார்த்து முடியும் போது அவர்கள் காதல் நம் மனம் முழுவதையும் நிறைத்து நிற்கிறது

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி