வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Saturday 3 March 2018

மேலைக் குளிர்

மேலைக் குளிர்
காலையும் மாலையும்
இரவும் எல்லா பொழுதுகளும்
மேலைக் குளிரின்
வன்மத்தை வெளிப்படுத்தி
உமிழ்கின்றன
வானம் பிழந்து
பூக்களாய் சொரிந்தாலும்
கால்கள் நடுங்க
கனன்றெழும் நெருப்பிடை
கையது பொத்தி
மெய்யது ஒடுங்கி
தடித்த போர்வைக்குள்
புகுந்தாலும்
இது உன் நிலமல்ல
என அறைந்து கொல்கிறது
பனியின் வாடை
ஓடு...
உன் தாய் மண் நோக்கி

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி