வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Friday 16 March 2018

மகாத்மா

மகாத்மா

காந்தி இரவு
என் கனவில் வந்தார்
நான் இப்போ
மகாத்மா இல்லை
என்றார்
பார்க்க பரிதாபமாய்
இருந்தது

என் பட்டத்தை
நடிகர் ஒருவர்
வேறொரு நடிகைக்கு
சூட்டியிருக்கிறார்
என்றார் அவர்
ஊஊ என பெரும் சத்தம்
கண் விழித்தேன்
வர்தா புயல்
சென்னையயை
கடந்து கொண்டிருந்தது
மகாத்மாவின் கல்லறை
உடைக்கப் பட்டு
உதிரம் வழிந்தது

11.12.2016

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி