வணக்கம் வருக பாலசுகுமார் பக்கம் இது

Sunday 18 March 2018

என்னைக் கவர்ந்த இளம் இசையமைப்பாளர் இமான்

என்னைக் கவர்ந்த இளம் இசையமைப்பாளர் இமான்



நூறாண்டுகளை கடந்து நிக்கும் தமிழ் சினிமா உலகில் இதுவரை பல இசையமைப்பாளர்கள் சாதனை படைத்துள்ளார்கள் அந்த வரிசையில் இளைஞர் இமான் தன் மெல்லிசையால் அசத்தி வருகிறார்
நூறு படங்களுக்கு இசையமைத்து முடித்துள்ள இந்த இளைஞர் தமிழ் மெல்லிசையில் வித்தியாசமான உச்சங்களை தொட்டு நிக்கிறார் நூறு படங்களுக்குள் நூற்றி இருபத்தியைந்து புதிய பாடகர்களை அறிமுகப் படுத்தி தமிழ் சினிமாவின் இசை வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஒவ்வொரு படத்திலும் புதிய புதிய தரிசனங்களை தொட்டு நம்மை தன் இசையால் வசப் படுத்தும் வல்லமை இமானுக்கு இருக்கிறது.
வித்தியாசமாக பாடல்களை கொடுப்பதில் அவரது திறமை புலப்படுகிறது தமிழ் இசை கர்நாடக இசை நம் மண்ணின் இசை என எல்லாவற்றையும் அறிந்திருக்கும் அவர் அவற்றை அழகுற சினிமாவுக்காக வடிவமைபதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
நேற்றும் இன்றும் 17,18,03.2018 திகதிகளில் நடை பெறும் சரி க ம பா நிகழ்ச்சி அவரது பாடல்களால் நிறைந்திருக்கிறது .
நேற்றைய நிகழ்வில் இமான் பியானோ வாசித்து பாட பின்னர் சிறினிவாஸும் ,கார்த்திக்கும் ,விஜய பிரகாசும் இணைந்தது இசையாய் சேர்ந்த போது நம்மை எங்கோ ஒரு தூரத்துக்கு வான் வெளிக்கு அழைத்து சென்றது போன்ற இசைப் பிரவாகம் சில நிமிடங்களில் வசப் பட்டது.
மெல்லிசை மன்னன் விஸ்வநாதனுக்கு பின் மெல்லிசை இளவரசர் என பட்டம் கொடுக்க கூடிய திறமையாளர் இமான் மெல்கிசை மன்னருக்கு பின் படங்களையும் கதையயையும் உணர்ந்து கதாபாத்திரங்களுக்கான இசையை அனுபவித்து வெளிப் படுத்தும் இசையமைப்பாளர் இமான்
எளிமையும் இனிமையும் கொண்ட ஒரு சாதாரண மனிதனாய் இசையயை மொழிகிறார் அவரது பியானோ காவியமாய் இசைக்கிறது இறுமாப்பு சற்றும் இல்லாத இசையாளனாய் நம் முன் இமான் உயர்ந்து நிற்கிறார

No comments:

நான் பயணித்த பாலத்தை தரிசித்த உறவுகளுக்கு நன்றி